அன்பு மலரட்டும்..

அன்பு மலரட்டும் ..

அல்லலுற்றோம்
அடிமைப் பட்டோம்
அன்னியரால்..
ஆட்சியை அகற்ற
அரும்பாடு பட்டோம்..
அருமையாய் கிடைத்தது
அருந்தவமாய் சுதந்திரம்..
ஆண்டுகள் 75
அன்னையவள்
அணியின் நல்முத்தாய்..

ஆயினும் முழுமை
அடைந்து விடவில்லை
அருந்தவமாய் பெற்றது.
அகற்ற வேண்டியது
ஆயிரம் உண்டு கண்டீர்…
அச்சமிலா நிலை வேண்டும்
அருமைமிகு பெண்டிற்கு..
ஆயுத கலாச்சாரம்
அறவே ஒழிய வேண்டும்
அச்சம் எனும் சூழல் நீங்கி
அமைதி என்றும் வேண்டும்..
ஆணி வேரை அழிக்கும்
அக்கிரமங்கள் ஒழிய வேண்டும்
ஆசிட் வீசும் கொடுமைகள்..
ஆளை வெட்டும் அரிவாள்கள்..
அறவே அகலட்டும்..
அமைதி பூக்கட்டும் …
அறிவெனும்
ஆட்சி தழைக்கட்டும் …
அப்போதே நாம்
அன்று பெற்ற சுதந்திரம் அழகாய் பூரணமாகும் ..

தி.வள்ளி
திருநெல்வேலி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *