<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: கவிதை போட்டி 2023_11 , 2023_12	</title>
	<atom:link href="https://neerodai.com/kavithai-potti-2023-11/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://neerodai.com/kavithai-potti-2023-11/</link>
	<description>வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்</description>
	<lastBuildDate>Wed, 17 Jan 2024 09:01:59 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.5</generator>
	<item>
		<title>
		By: Punitha S		</title>
		<link>https://neerodai.com/kavithai-potti-2023-11/#comment-33148</link>

		<dc:creator><![CDATA[Punitha S]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Dec 2023 09:23:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://neerodai.com/?p=8553#comment-33148</guid>

					<description><![CDATA[அகிம்சையின் அண்ணல் … மனிதருள் மாணிக்கம்

போர்பந்தரின் நாயகனாம்! உண்மையின் உத்தமராம்!
அகிம்சையின் வித்தகராம்! கஸ்தூரிபாயின் புத்திராம்!!
ஆயுதத்தால் என்றுமே வெல்ல முடியாததை
அகிம்சையால் வென்ற வெற்றி வீரராம்
மூவரிக் கோடுகளோ அவர் நெற்றியில்
பல மைகளோ இவர் வாழ்க்கையில்
மனதிலோ வலிமை உள்ளத்திலோ தூய்மை
சொல்லிலோ உண்மை செயலிலோ நேர்மை
உவகையால் உலகை வென்ற கைத்தடிமனிதர்
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதம்
பாரதத்தாய் கண்டு எடுத்த முத்து
விடுதலை பெற்று தந்த வைரம்
இதயத்தில் விதைத்தார் எளிமையின் வித்தை
ஈன்றன்னை உளம்மகிழ படைத்தார் சத்தியசோதனை
தீயிட்டு ஒழித்தார் களையெனும் தீண்டாமையை
ஏழ்மையை போக்க களைந்தார் ஆங்கிலேயஆடையை
உப்பு சத்யாகிரகம் செய்து அணிந்தார் சத்தியத்தை
உள்ளங்கையால் சுழற்றினார் கதர் இராட்டினத்தை
ஒன்றுபட அமைத்தார் இந்து-முஸ்லீம் சமத்துவத்தை
அனைவரும் படிக்கனும் அவரின் சுயசரிதை
நேர்மையும் நேரமும் தவறக்கூடாது என்றார்
நேர்த்தியாய் அரும் பெரும் அண்ணலார்
காந்தி குடித்ததோ ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலு
நிலக்கடலையே அவரின் தினச்சோறு
கடமையை உடைமை ஆக்கினார் காந்தி
இன்று எண்ணற்ற இதயங்களில் காந்தி
ஏழை மக்களுக்கு பெற்று தந்தார் சாந்தி
உலகம் முழுவதும் கிடைத்தது மனஅமைதி
அண்ணல் காந்தி அணையா விளக்கு
இல்லம்தோறும் காந்தியின் கொள்கை
ஐயமின்றி சொல் அண்ணல் காந்திக்கு அஞ்சலி
ஓளடதம் போன்றது அவரின் பொன்மொழி
மனிதருள் மாணிக்கமாம் தேசப்பிதாவினது
தபால்தலையை வெளியிட்டு உலக நாடுகள் கௌரவித்தது

ஆக்கமும் எழுத்தும் புனிதா]]></description>
			<content:encoded><![CDATA[<p>அகிம்சையின் அண்ணல் … மனிதருள் மாணிக்கம்</p>
<p>போர்பந்தரின் நாயகனாம்! உண்மையின் உத்தமராம்!<br />
அகிம்சையின் வித்தகராம்! கஸ்தூரிபாயின் புத்திராம்!!<br />
ஆயுதத்தால் என்றுமே வெல்ல முடியாததை<br />
அகிம்சையால் வென்ற வெற்றி வீரராம்<br />
மூவரிக் கோடுகளோ அவர் நெற்றியில்<br />
பல மைகளோ இவர் வாழ்க்கையில்<br />
மனதிலோ வலிமை உள்ளத்திலோ தூய்மை<br />
சொல்லிலோ உண்மை செயலிலோ நேர்மை<br />
உவகையால் உலகை வென்ற கைத்தடிமனிதர்<br />
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதம்<br />
பாரதத்தாய் கண்டு எடுத்த முத்து<br />
விடுதலை பெற்று தந்த வைரம்<br />
இதயத்தில் விதைத்தார் எளிமையின் வித்தை<br />
ஈன்றன்னை உளம்மகிழ படைத்தார் சத்தியசோதனை<br />
தீயிட்டு ஒழித்தார் களையெனும் தீண்டாமையை<br />
ஏழ்மையை போக்க களைந்தார் ஆங்கிலேயஆடையை<br />
உப்பு சத்யாகிரகம் செய்து அணிந்தார் சத்தியத்தை<br />
உள்ளங்கையால் சுழற்றினார் கதர் இராட்டினத்தை<br />
ஒன்றுபட அமைத்தார் இந்து-முஸ்லீம் சமத்துவத்தை<br />
அனைவரும் படிக்கனும் அவரின் சுயசரிதை<br />
நேர்மையும் நேரமும் தவறக்கூடாது என்றார்<br />
நேர்த்தியாய் அரும் பெரும் அண்ணலார்<br />
காந்தி குடித்ததோ ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலு<br />
நிலக்கடலையே அவரின் தினச்சோறு<br />
கடமையை உடைமை ஆக்கினார் காந்தி<br />
இன்று எண்ணற்ற இதயங்களில் காந்தி<br />
ஏழை மக்களுக்கு பெற்று தந்தார் சாந்தி<br />
உலகம் முழுவதும் கிடைத்தது மனஅமைதி<br />
அண்ணல் காந்தி அணையா விளக்கு<br />
இல்லம்தோறும் காந்தியின் கொள்கை<br />
ஐயமின்றி சொல் அண்ணல் காந்திக்கு அஞ்சலி<br />
ஓளடதம் போன்றது அவரின் பொன்மொழி<br />
மனிதருள் மாணிக்கமாம் தேசப்பிதாவினது<br />
தபால்தலையை வெளியிட்டு உலக நாடுகள் கௌரவித்தது</p>
<p>ஆக்கமும் எழுத்தும் புனிதா</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
