மின்னிதழ் ஜனவரி 2024

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh december 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்: அங்கயற்கண்ணி ஸ்ரீனிவாசன் 

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

கதை சொல்லி போட்டி - இரண்டு கட்டங்களாக

சுய முன்னேற்ற சிந்தனைகள் - நீரோடைமகேஸ்

சுந்தர பவனம் - நூல் மதிப்பீடு

ஆசிரியர் – தி.வள்ளி

ஐந்து தலைமுறைகளைக் கண்ட ஒரு மாளிகை ..இது ஒரு நூற்றாண்டின் கதை ..ஒரு நூற்றாண்டின் கால மாற்றத்தை, கலாச்சார மாற்றத்தை, கதை மாதர்களின் மனதின் மாற்றத்தை, கதைப் போக்கில் சொல்லிக் கொண்டு செல்லும் நோக்கத்தில் எழுதத் தொடங்கினேன்.

எழுதும் போது எனக்குள் இருந்த நம்பிக்கை குறைவு.. மனதில் இருப்பதை வார்த்தையில் வடிக்க முடியுமா என்ற தயக்கம்… எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இக்கதையை கொண்டு செல்ல முடியுமா என்ற யோசனை …தலைமுறை மாற்றங்களை சரியான முறையில் கடத்த முடியுமா என்ற தயக்கம் ..என பலவித தயக்கங்களுடன் எழுத ஆரம்பித்தேன்…

இக்கதையை நான் பிரதிலிபி தளத்தில் பதிவிட்ட போது …வாசகர்களின் ஏகோபித்த அதரவு என்னை நல்லபடியாக கதையை முடிக்க வைத்தது. ஊக்கப்படுத்திய வாசக நண்பர்களுக்கு என் நன்றி…கிட்டத்தட்ட 40,000 பேர் வரையில் கதையை அத்தளத்தில் படித்துள்ளனர்.

கதை மூலம் நான் சொல்லியது.. சொல்ல விரும்பியது.. ஆகியவற்றில் சில அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .

ஆரம்ப அத்தியாயங்கள் கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள்.. சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்த உறவுகளுக்கு இடையே உள்ள அழகான பிணைப்பு.. ஏறக்குறைய இருந்தாலும் உறவுகளை விட்டுக் கொடுக்காத தன்மை ..
முதல் தலைமுறையினர் தங்கள் பெற்றோருக்கு கொடுத்த மரியாதை.. அப்படியே அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை. தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட கருத்துக்கள் அதிகம் இல்லாமல் . ஒரே தலைமையின் கீழ் மொத்த குடும்பமும் இயங்கியது. ஆகியவற்றை என்னால் இயன்ற அளவு விளக்கியுள்ளேன்.

விவசாயத்தை நம்பி இருந்த, பெரிய பண்ணை.. ஜமீன்… குடும்பங்கள. மெல்ல மெல்ல காலப்போக்கில் அதிலிருந்து வெளியே வந்து, அடுத்த தலைமுறைகள் படித்து வேலை பார்க்க என வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்த கால மாற்றம் ..

பெயரை மட்டுமே அந்தஸ்தாய் தாங்கி நிற்கும் இத்தகைய பழைய ஜமீன் மாளிகைகளை இன்றும் பார்க்கிறோம். இத்தகையதொரு மாளிகையின் உட்பகுந்து அதன் வரலாற்றை பார்க்குங்கால் இத்தகைய நிகழ்வுகள் அந்த மாளிகையிலும் நடந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

முத்தோர் சொல்லுக்கு முழுவதும் கட்டுப்பட்ட முதல் தலைமுறை ..காலப்போக்கில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஆன உறவு நட்பு முறையில் மாற தங்கள் கருத்துகளை சுதந்திரமாக முன்வைக்கும் இளைய தலைமுறை …அவர்கள் கருத்துகளை உணர்வுகளை ஏற்று அதற்கேற்ப மாறும் மூத்த தலைமுறை…கட்டுப்பாடுகளை விரும்பாத மூன்றாம் தலைமுறை.. .என உறவுகளின் மன மாறுதல்களை இக்கதையின் வழிநெடுக்க காணலாம்.

அக்கால மனிதர்களின் உழைப்பை அவர்கள் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த மின் சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள்,அவை உட்பகுத்த காலகட்டங்களை என் அறிவுக்கு தெரிந்த வகையில் தந்திருக்கிறேன்.

இக்கதையால் நான் உணர்ந்த உணர்த்திய சில விஷயங்கள் ……

## அந்தக் காலத்தில் கூட்டு குடும்பத்தில் பெரியவர்கள் எவ்வாறு ஒரு அரணாக ஒரு தலைமுறைக்கு இருந்திருக்கிறார்கள் அறிவுரை சொல்வதாகட்டும் அரவணைத்துச் செல்வதாகட்டும் ..

## அந்தக் காலத்து ஆங்கிலம் கலக்காத தமிழ் மொழி எவ்வாறு காலப்போக்கில் சிதைவடைந்து இப்போது நாம் பேசும் ஆங்கில தமிழ்ச் சொற்களில் நிற்கிறது ..வழக்கத்தில் இருந்த பல தூய தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய்விட்டது ..பலவடைகள் பல சொல்வாரின்றி போனது.

## அக்காலத்தில் பணியாட்களின் பாசம் தங்கள் முதலாளி குடும்பத்து மேல் வைத்திருந்த வாஞ்சை …அதே அக்கறை முதலாளிகளுக்கும் தங்கள் பணியாளர்கள் இடத்தில் அவர்கள் குடும்பத்தின் மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

## முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது தலைமுறை இடைவெளி ..கருத்து வேறுபாடுகள் ..கருத்து மோதல்கள் ..
முக்கியமாக முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் இருக்கும் இடைவெளி அதை பாலமாக இணைக்கும் இரண்டாம் தலைமுறை …அதற்காக அவர்கள் இரு தலைமுறையிடமும் நடுவே போராடும் தருணங்கள்

## அந்தக் காலத்து சடங்கு சம்பிரதாயங்கள் இக்கால தலைமுறை அறியாதது எனவே அவற்றை சற்று விவரமாகவே… என்னுடைய ஆரம்ப அத்தியாயங்களில் கொடுத்திருக்கிறேன்.

## இக்கதை எழுதும் போது எனக்கு தானே வியந்த சில விஷயங்கள்.. அக்காலத்தில் குழந்தைகள் உன் பிள்ளை என் பிள்ளை என்று இல்லாமல் வீட்டில் எல்லோருடைய அன்பையும் பெற்று ..தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி ,அத்தை, மாமா, பெரியப்பா ,பெரியம்மா, என உறவுகளுடன் வளர்ந்த மிக அழகான ஆரோக்கியமான காலகட்டம் ..

## விருந்தோம்பல் ..ஆசா பாசமான அணுகுமுறை ..ஒரு கஷ்டம் வரும்போது நான் இருக்கிறேன் என்று சொல்லும் அந்த அரவணைப்பு ..இதெல்லாம் இக்கதையின் வாயிலாக நாம் அறியும் போது அந்த தலைமுறையின் சில நல்ல விஷயங்களை நாம் இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது ..

## ஒரு நல்ல விஷயம் இந்த தலைமுறையில் அந்த உறவுகள் தொடர்பற்று துண்டித்துப் போய் விடாமல் நவீன பேஸ்புக் வாட்ஸ் அப் ..குழுக்களின் மூலம் குடும்ப ஒற்றுமை வளர்வது.
கசின்ஸ் மீட் ( Cousin’s meet) எனப்படும் உறவுமுறைகள் சந்தித்துக் கொள்ளும் ஏற்பாடும் மிகவும் நாம் கேள்விப்படும் நல்ல விஷயமாக இருக்கிறது .அது கண்டிப்பாக தொடர வேண்டும் என்பது இளைய தலைமுறையிடம் நான் வைக்கும் தாழ்மையான கோரிக்கை.

இது ஐந்து தலைமுறைகளை கூறும் கதை என்பதால்.மிகவும் தயக்கத்துடன் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எந்தவித எதிர்மறை கருத்தும் வராததும் ..மேலும் ஊக்கம் அளிக்கும் விமர்சனங்களாலும் தூண்டப்பட்டு கதைக்குள் என்னை நானே ஐக்கிய படுத்திக் கொள்ள, அத்தியாயங்கள் நீண்டு கொண்டே போயின..படிக்கும் வாசகர் எண்ணிக்கை கூடக் கூட எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஊக்குவித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்…

சிறுகதை தொகுப்பு - பெ.சிவக்குமார்

You may also like...