நீரோடை இலக்கிய விருதுகள் 2024 முடிவுகள் அறிவிப்பு

நீரோடை இலக்கிய விருதுகள் 2024 க்கு அனுப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து 39 நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் இரண்டு நூல்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

விருதுபெறும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள்,

நூல்: இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்
நூலாசிரியர்: எழுத்தாளர் சந்திரா மனோகரன் 

நூல்: குடம்பி
நூலாசிரியர்: எழுத்தாளர் நிழலி

விருது விழா அவினாசியில் வரும் பிப்ரவரி 22 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இரண்டு நூலாசிரியர்களுக்கு விருதும், அறிவிக்கப்பட்ட தொகை பகிர்ந்தும் வழங்கப்படும்.

விருது பெறும் நூலாசிரியர்களுக்கு நீரோடை சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

You may also like...