தலை முடியும் தலையாய பிரச்சினையும் – இயற்கை தீர்வு காண்போம்

அந்த காலங்களில் 50,55 வயது ஆனால் தான் மெல்ல மெல்ல வெள்ளைமுடி எட்டிப்பார்க்கும். ஆனால் இன்றோ 20,25 வயதிலேயே இளநரை, முடிஉதிர்தல்,உடைதல்,பொடுகு போன்ற கேசம் குறித்த பிரச்சினைகள் பலரை பாடாய் படுத்துகிறது. ​இளநரைக்கு வண்ணசாயங்கள் (டை) அடிப்பதால் முடிக்கு மட்டும் அல்ல முடியின் வேருக்கும் பாதிப்பு உண்டாகிறது அதனால் இயற்கை வழியில் எப்படி சரி செய்யலாம் என்றுப்பார்ப்போம்.

Natural solution for hair loss

​*வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம். முடியை மென்மையாக கையாள வேண்டும்.

*இயற்கையான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது. முடிஉதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம்.
natural solution for hair loss
* நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். படிப்படியான இளநரை மாறுவதை காணலாம்.

* நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச்சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

* சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

* முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.​

You may also like...