கவிதை போட்டி 2023_11 , 2023_12

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-11

kavithai potti

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.

கவிதை போட்டி அறிவிப்பு

  • தீபாவளி
  • அண்ணல் அம்பேத்கார்
  • கந்த சஷ்டி
  • திருக்கார்த்திகை தீபம்
  • இன்னா செய்தாரை ஒறுத்தல்
  • திருவண்ணாமலை
  • மகாத்மா
  • அண்ணாமலை
  • விரும்பிய தலைப்பு

கல்விக்கண் திறந்த மகான் பிறந்தநாள் சிறப்பாக இந்த மாத போட்டி அறிவிக்கப்படுகிறது

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-11. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

1 Response

  1. Punitha S says:

    அகிம்சையின் அண்ணல் … மனிதருள் மாணிக்கம்

    போர்பந்தரின் நாயகனாம்! உண்மையின் உத்தமராம்!
    அகிம்சையின் வித்தகராம்! கஸ்தூரிபாயின் புத்திராம்!!
    ஆயுதத்தால் என்றுமே வெல்ல முடியாததை
    அகிம்சையால் வென்ற வெற்றி வீரராம்
    மூவரிக் கோடுகளோ அவர் நெற்றியில்
    பல மைகளோ இவர் வாழ்க்கையில்
    மனதிலோ வலிமை உள்ளத்திலோ தூய்மை
    சொல்லிலோ உண்மை செயலிலோ நேர்மை
    உவகையால் உலகை வென்ற கைத்தடிமனிதர்
    பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதம்
    பாரதத்தாய் கண்டு எடுத்த முத்து
    விடுதலை பெற்று தந்த வைரம்
    இதயத்தில் விதைத்தார் எளிமையின் வித்தை
    ஈன்றன்னை உளம்மகிழ படைத்தார் சத்தியசோதனை
    தீயிட்டு ஒழித்தார் களையெனும் தீண்டாமையை
    ஏழ்மையை போக்க களைந்தார் ஆங்கிலேயஆடையை
    உப்பு சத்யாகிரகம் செய்து அணிந்தார் சத்தியத்தை
    உள்ளங்கையால் சுழற்றினார் கதர் இராட்டினத்தை
    ஒன்றுபட அமைத்தார் இந்து-முஸ்லீம் சமத்துவத்தை
    அனைவரும் படிக்கனும் அவரின் சுயசரிதை
    நேர்மையும் நேரமும் தவறக்கூடாது என்றார்
    நேர்த்தியாய் அரும் பெரும் அண்ணலார்
    காந்தி குடித்ததோ ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலு
    நிலக்கடலையே அவரின் தினச்சோறு
    கடமையை உடைமை ஆக்கினார் காந்தி
    இன்று எண்ணற்ற இதயங்களில் காந்தி
    ஏழை மக்களுக்கு பெற்று தந்தார் சாந்தி
    உலகம் முழுவதும் கிடைத்தது மனஅமைதி
    அண்ணல் காந்தி அணையா விளக்கு
    இல்லம்தோறும் காந்தியின் கொள்கை
    ஐயமின்றி சொல் அண்ணல் காந்திக்கு அஞ்சலி
    ஓளடதம் போன்றது அவரின் பொன்மொழி
    மனிதருள் மாணிக்கமாம் தேசப்பிதாவினது
    தபால்தலையை வெளியிட்டு உலக நாடுகள் கௌரவித்தது

    ஆக்கமும் எழுத்தும் புனிதா