உணவே மருந்து – சீரகக்குழம்பு

Cumin Sambar

உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ​,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar.

தேவையானவை:

சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிதம் செய்ய :

எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
வெந்தயம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை

seeraga kolambu

செய்முறை :

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.

* புளியை ஒரு கப் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள்.

* வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டை சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள்.

* சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்த்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்.

* பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

* நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி எட்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

* ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

​​

You may also like...