வலையோடை பதிவு 3

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 3

valaiyodai part 1

நீண்டுகொண்டே செல்கிறது நின் நினைவுகளுடன் அந்த நீல(ள) வானம்
@maheskanna


கடல் அலையின் அச்சுறுத்தலை
மீனவனின் மூச்சு காற்று கருத்தில்கொள்ளாது.!
@nikhan_twitz


கைம்பெண் வைத்திருக்கும்
ஹோட்டலில் குண்டு குண்டாய்
மல்லிப் பூ போல இட்லி..!! – valaiyodai part 3
@_iniyal_Twitz_


புரியாத போது
தொடங்கின
வாழ்க்கை..
புரியத் தொடங்கிய
போது.!
முற்று பெற்றது!!
@Jai80813330


உரையாடலின் கடைசிவார்த்தை சொல்லி விடும்,நம்மில் விலகிச் செல்வதுயாரென்று..
@TRAMESH21548526


என் தனிமையில் ஆக சிறந்த துணை புத்தகங்களும் இசையுமே…
@akalvizhi


அதிகம் அன்பு நிறைந்த உள்ளம் சன்டை போடுமே தவிற சந்தேகப்படாது, சந்தர்ப்பம் பார்த்தும் விலகாது.
@THARZIKA


மறந்த கதையில்
வலியுண்டு
மறைத்த கதையில்
துரோகமுண்டு
@raajaacs


வலிகள் மறைய
வழிகளை தேட
வேண்டுமே தவிர
வலி நிவாரணிகளை
தேடக் கூடாது.
@vijay_twitzz


பிறரின் பலவீனத்தை உன் பலமாக்க நினைக்காதே …பின் அதுவே உன் பலவீனமாகிவிடும்….
@sankariofficial

You may also like...