பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 9

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9

bharathiyar puthiya aathichudi

மிடிமையில் அழிந்திடேல்

வறுமை என பன்னெடுங்
காலம் ஒருவனை வாட்டும்
என்பது அவனது குறையே
கடின உழைப்பின்மையும்
கண்டது எண்ணி உழன்று
இருத்தலாலும் அழிவென
ஐயமற உணர்வாய்

மீளுமாறு உணர்த்து கொள்

நமது சொல்லோ செயலோ
எது என்றாலும் அளவென
அதனை நிர்ணயித்தலும்
வேண்டுமென உணர்ந்தே
அதனை உறுதி செய்தால்
எதனிலும் மீளலாம் தானே
என உரக்க சொல்வேனே

முனையிலே முகத்து நில்

நீ ஆரம்பத்திலிருந்துதே
அதிரடி காட்டாது அளவென
நின்றிருந்தால் சென்றவழி
மீளுதல் யாருக்கும் எளிதே
என்றாலும் மீள முடியாதது
ஒன்றுண்டு இங்கு அதுவே
காலம் என்பதனை உணர்க

மூப்பினுக்கு இடங் கொடேல்

உன் எழுத்து சொல் செயல்
எண்ணம் என அனைத்தும்
இளமை என நீ எண்ணுதல்
சற்றுஉடற்பயிற்சி சரிசம
உணவு இளவயது நண்பர்
இருந்தாலே முதுமை
உனை அண்டாது காண்

மெல்ல தெரிந்து சொல்

உனக்குத் தெரிந்ததென
எல்லாம் உற்றார் உறவு
நண்பர்களுக்கு சொல்லும்
போது தெள்ளென தெரிந்த
பின் மெல்லவே சொல்லல்
சிறப்பாம் இது பகிரி
குழு பதிவிற்கும் என கொள்

மேழி போற்று

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
அவர் வாழ்வின் மேன்மைக்கு
மேழி எனும் ஏர்க்கலப்பையே
பிரதானம் எனவாக
உணவுண்ணும் ஒவ்வருமே
மேழி போற்றல்
நியாயம்தானே

மொய்ம்புற தவஞ்செய்

கடுந்தவஞ் செய்தல் ஏன்
என்றே சிந்தித்தால் நற்
பேறும் நலவாழ்வு பெற்றிட
என்று எண்ணுவாராயின்
அதனை வலிமையாய்
செய்தல் வேண்டுமென
வகுத்தனரே முன்னோர்

மோனம் போற்று

எப்பொருள் உன்வாய் வழி
சொல்லின் அப்பொருளால்
அடுத்தவர்களுக்கு நன்மை
பயப்பதில்லையாயின்
அப்பொருட் பேச்சிடினும்
மோனமெனும் அமைதியே
பெரிதென உணர்வோமே – bharathiyar puthiya aathichudi 9

மௌட்டியந் தனை கொல்

இல்லாமை இயலாமை
என எத்தனையோ ஆமை
உன்னிடத்தே இருந்தாலும்
அத்தனை ஆமைகளையும்
விட அறியாமையே தான்
மிகப் பெரும் பிணி என்றே
உணர்ந்தே அதை கொல்

யவனர் போல் முயற்சி செய்

யவனர் யாரென அறிவீரோ
தோற்கருவி வாசிப்போரும்
ஓவியரும் எனில் அதனை
கற்க பயிற்சி மிக தேவை
எனஉணர்ந்து அதனொத்த
முயற்சி அவசியம் தான்
அனைத்திலுமே

– மா கோமகன்

You may also like...

2 Responses

  1. வாழ்க வளமுடன் ஆர்.வள்ளி. says:

    கோமகன் ஐயாவின் எளிமையான விளக்கம் என் அறிவை ‌மேலும் அழகுப்படுத்துகிறது எளிமையான வார்த்தைகள் எண்ணத்தை எழில் படுத்துகிறது….தமிழ்த்தேனை சுவைத்தேன்… மகிழ்ச்சியான நன்றிகள் 🙏🙏

  2. Kavi devika says:

    விளக்கம் அருமை வாழ்த்துகள்