பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 8

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8

bharathiyar puthiya aathichudi
பிணத்தினைப் போற்றேல்

பெற்றோர் இட்ட உன்பெயர்
ஒர் நாள் மறைந்தே ஏதும்
இயலா பிணமென்றேதான்
மாறுதல்இயல்பென்றாலும்
வாழும் போதே பிறர்க்கு
உதவா பிணமென மாறவும்
வேண்டாமே நீயே

பிழைக்கு இடங் கொடேல்

மனதில் ஓழுக்கந்தவறுகை
சொல்லில் தீயன சொல்ல
செயலிலும் ஈனச் செயல்
இவையாவும் பிழையென
தெரிந்திடல் வேண்டுமே
தீ என இதனை ஒதுக்குதல்
நானிலத்தில் நலமாகுமே

புதியன விரும்பு

எனக்கு இதுவே போதும்
என்பனவெல்லாம் சிற்சில
இடங்களிலே சிறப்பு தான்
எனினும் கல்வி கற்றலும்
நல்லன கேட்டலும் புதியன
விரும்பாதுஇருந்திருந்தால்
அரை ஆயுள் மனிதனாம் நீ

பூமி இழந்திடேல்

பூமி என்பதன் புகழென்ன
எனில் கானகம் மலையும்
கண்டதொரு ஆறும் என
எல்லாவகை இயற்கையே
ஆயின் அவற்றை அழித்து
திருத்த அதிகாரம் தந்தது
யார் உனக்கே

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிதாவதே
அது அவரவர் உள்ளத்து
அவா எனக் கொள் பணம்
பட்டம் பதவி புகழ் கல்வி
திரு என எதுவாயினும்
அதில் உயர்வை நாடுதல்
ஒர் வகையில் நலம் தானே

பேய்களுக்கு அஞ்சேல்

சாதி சமயம் இனம் மதம்
மொழியென எல்லாமும்
பேயெனும் கூற்றத்திற்கு
நேர் என்று உணர்ந்து நீ
அஞ்சாதிருத்தல் அவசியம்
அவற்றோடு கட்சியையும்
இணைத்துக் கொள்

பொய்மை இகழ்

பொய்மை எனப்படுவது
யாதெனில் நிலையாமை
செயற்கை போலி மாயை
என உருமாறிக்கொள்ளும்
அத்தனையுந்தானேயாம்
அவ்வாறாயின் அவற்றை
இகழ்தல் புகழுடை செயல்

போர்த் தொழில் பழகு

வீரனொருவன் பகைவரை
வெல்ல களம்காண செலல்
போரெனபடுவதாயின் நம்
நாட்டை காக்கும் நாட்டம்
உடையோன் மேற்கொள்
போர் முறை தந்திரங்கள்
யாவருக்கும் அவசியமே

மந்திரம் வலிமை

நம் எண்ணத்தில் உதிக்கும்
சொல்லோ செயலோ அது
திரும்பத்திரும்ப எண்ணி
இருத்தலே மந்திரமென்றே
உணர்ந்து எச்செயலிலும்
நாட்டம் மிகக் கொள்வது
மானுடர்க்கு அழகாகும் – bharathiyar puthiya aathichudi 8

மானம் போற்று

எந்த ஒரு காரியத்திலும்
ஈடுபடும் முன்னர் தனது
நிலையும் தகுதியும் இது
என எண்ணியிருத்தலே
மானம் எனப் படுமாயின்
தன்நிலை தாளாமையே
மானத்திற்கு மகுடமாகுமே

– மா கோமகன்

You may also like...

4 Responses

  1. Kavi devika says:

    மிக அருமை வாழ்த்துகள்

  2. ஆர்.வள்ளி says:

    பிணத்தினைப் போற்றேல், மந்திரம் வலிமை, இந்த புதிய ஆத்திசூடி
    வரியின் விளக்கம் மனதை மாற்றி அமைக்கும் அருமையான வரிகள்…👌🙏🙏

  3. சைல்ஸ் அகமது says:

    உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்த வழி முறைகள்
    சிறப்பு , வாழ்வியல் வழி முறைகளில் மானிடர்கள் ஏற்றிருக்க வேண்டிய வழிகாட்டுதல் கவித்துவத்தில் மிளிர்கின்றது. வாழ்த்துகள் கவிபெருமகனார் திரு கோமகன் அவர்களுக்கு .

  4. வேல் says:

    புதியன விரும்பு :

    கற்றலை மனதில் சுமந்த வண்ணமாய்
    புதிய கற்றலை விரும்புதலும் சிறந்த ஞானத்தின் அறிவாற்றலே….!
    கற்றலின் வரிகள் அருமை….