ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

பண்டிகை காலங்களில் செய்யப்படும் பலகாரங்களை சுவை மனம் கூட்டிட மட்டும் ஏலக்காய் பயன்படுகிறது என்று பலரும் நினைத்திருப்பார். ஆனால் அதையும் தாண்டி ஏலக்காய் ஒரு மருந்தாக பல இடங்களில் பயன்படுகிறது. இதை பற்றிய கட்டுரை தான் இந்த பதிவு elakkai maruthuva gunangal.

ஏலக்காய் பலவகைகளில் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியன அடங்கியுள்ளன. மேலும் இவை பித்தம் மற்றும் நரம்புத் தளர்ச்சியை நீக்கி வலுப்படுத்தும் தன்மையது.

elakkaayin maruthuva gunangal

ஏலக்காய் தூள், நல்ல தேயிலை தூள் இரண்டையும் சேர்த்து தேநீர் தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து என்றும் உணவுப்பொருள் என்றும் கூறலாம்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடி கலந்து ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை சாப்பிட்டு வர பித்தம் குறைய வாய்ப்புள்ளது. அன்னாசிப்பழச்சாறுடன் ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து நன்றாக அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வந்தால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

செவ்வாழைப்பழத்துடன் சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து அத்துடன் எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

You may also like...

1 Response

  1. Pavithra says:

    Arumai entha thagavul megavum payan ulathaga irunthuthathu…..
    Ethu pondrum maruthuva kuripu varaverka padukirathu