மின்னிதழ் பிப்ரவரி 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh february 2023


சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்:
க. சம்பத்குமார்

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

சிறந்த வாசகர் போட்டி அறிவிப்பு: கீழுள்ள பதிவுகளை வாசித்து சிறந்த கருத்து (கமெண்ட்) பதிவு செய்யும் வாசகருக்கு பரிசு (புத்தகம்) அனுப்பி வைக்கப்படும்.


ஆரோக்கிய சமையல் – தயிர் பூசணி

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – 1/4கி ( துருவியது)
தயிர் – 1/2 லிட்டர்
அவல் – 1/4 கிலோ
கொடைமிளகாய் – 1( பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – 1/4 கட்டு( பொடியாக நறுக்கியது)
உலர் திராட்சை – 15
மாதுளை – 1/4 கப்
உப்பு – ருசிக்கேற்ப
மிளகுத்தூள் – ருசிக்கேற்ப

அரைத்து ஊற்றும் பொருட்கள்
காய்ந்த.மிளகாய் 5-6
மல்லித்தூள் – 2 மேசைக்கரண்டி
சீரகத்தூள் – 1 மேசைக்கரண்டி
சி.வெங்காயம் – 1/4 கி
தேங்காய் – 1/2 மூடி
இஞ்சி,பூண்டு விழுது – தேவைக்கு

செய்முறை

துருவிய பூசணி( தண்ணீர் இன்றி பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதனுடன் அவல், கொடைமிளகாய்,கொத்தமல்லி,தயிர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். பிறகு உலர் திராட்சை,மாதுளை சேர்க்கவும். இப்போது சுவையான தயிர் பூசணி தயார்.

– சூலூர் ஆனந்தி


கவிதை தொகுப்பு

இந்த மாத மின்னிதழில் கவிஞர் உமா மகேஸ்வரி அவர்களை அறிமுகம் செய்வதோடு அவர்களின் கவிதைகளை வெளியிடுகிறோம்.
யார் யாரோ..!!

யார் யாரோ
எழுதிய கவிதையை..,
யார் யாரோ ரசிக்கின்றாா்..,!!

யார் யாரோ எடுத்த..
உளியில்..,
செதுக்கிய சிற்பங்களை தரிசிக்கின்றாா்.,!!

யார் யாரோ
எடுத்த மொட்டுக்கள்.,
மாலைகளாய்
திருமணத்தில் அணிகின்றாா்.,!!

யார் யாரோ
எடுத்த நெல்மணிகள்.,
அமுதாய்
யாரோ பசியாறுகின்றாா்..!!

யார் யாரோ
விதைத்த விதைகள்.,,
இன்று மரங்களாய் தந்த
நிழலில் சிரிக்கின்றாா்.,!!

கனவுகள் உடைந்து
கவிதைகள் ஆனது.,
யாருக்கு
தெரிந்திருக்கும்.,!!

அந்த கற்கள்
பட்ட அடிகள்.,
யாருக்கு வலித்திருக்கும்.,!!

நெல்மணிகள்
சுவாசம் விட்டது.,
யாருக்கு புரிந்திருக்கும்.,!!

மொட்டுக்கள்
மலர்ந்த சத்தம்.,
யாருக்கு கேட்டிருக்கும்..!!

அந்த மரங்கள்
நிழல் தருவது.,
தொடர் கதையாயிருக்கும்.,!!

யாரோ உருவாக்க,
யாரோ கனவாக்க.,
காலங்கள்
யார் யாருக்கோ .,
மறுபடியும் சுழல்கிறது.,!!
(குமரி உத்ரா)


நூல் விமர்சனம்

‘சிகரம் தொடும் உறவுகள் – திறனாய்வு maatha ithazh february 2023


சிறுகதை – தாய்மை

கார் ஏர்போட்டை விட்டு கிராமம் நோக்கி விரைந்தது, நர்த்தனாவுக்கு அந்த கிராமச்சூழலே பிடிக்கவில்லை.., சிட்டியில், லிப்டில் பயணித்து அ்ப்பாவுடன் காரிலும்.., மற்ற நேரங்களில் தோழிகளுடனும்.., ஸ்கூட்டியில் நகரத்தையே வலம் வரும் அவளுக்கு காபி கபே பீட்சா கார்னர் என சாப்பிட்டு ஜாலியாக சிட்டுக் குருவியாய் சிறகடிப்பவளுக்கு…

திருமணம் என்ற பந்தத்தில் தன்னை பெற்றோர்கள், இணைத்து விட்டதும், கணவன் முகுந்தனின் அரவணைப்பும்.., பிடிக்கவில்லை. தாய், தந்தையிடம் எரிந்து விழுந்தாள். தோழிகள் சுதந்திரமாக உலா வர.., தான் மட்டும் கல்யாணம் என்ற சகதியில் மாட்டிக் கொண்டோமே..,??

அப்பா ரங்கராஜன் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை எதிர்த்து பேச தைரியம் இல்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு தான் முகுந்தனுக்கும் நர்த்தனாவுக்கும் திருமணம் முடிந்திருந்தது. அவனும் நகரில் ஒரு அபார்ட்மெண்டில் தங்கி இருக்கிறான். அவன் சொல்லி இருக்கிறான். அடிக்கடி..,

கிராமத்தில் தன்னுடைய தாத்தா, பாட்டி, பண்ணைவீடு, தோட்டம்..,அதன் செழிப்பு என அவன் சொல்லிக்கொண்டு போக.., ஆனாலும், எதையுமே கேட்காதவள் போல இருப்பாள் நர்த்தனா.

அவள் எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் இருக்க..,
அவன் அம்மா “ஒரு வாரம் கிராமம் போயிட்டு வாங்கப்பா” என அனுப்பி வைத்தாள்.
முகுந்தின் கிராமம் என்றதும் ஒன்றும் பேசாமல், அவனிடம் இன்னும் அதிகமாக எரிச்சல் பட்டாள்.

கிராமம் என்றாலே படிப்பறிவு இல்லாத மக்களும் சுகாதார மற்ற இடங்களும் தான் அவள் கண் முன் விரிந்தது.

ஏர்போர்ட்டில் இருந்து விடிகாலை நான்கு மணிக்கு. வீட்டிற்கு வந்து இறங்கியதும்குளித்து வந்ததும் பாட்டி ஆவி பறக்க காபி கொடுத்தாள். அந்த சுவை வித்தியாசமாக தெரிந்தது நர்த்தனாவுக்கு.

அதற்குள் லேசாக விடிந்திருந்தது.
பாட்டி பெருமையாய் நர்த்தனாவை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தாள். முற்றத்தில் பாட்டி தெளித்த சாணத்தின் வாசனை, லேசாக காற்றில் கலந்து வீசியது.
பாட்டி போட்ட கோலத்தின் நடுவே.., பூசணிப்பூ புன்னகையாய் சிரித்தது.

ஆச்சரியமாய் பார்த்தாள், நர்த்தனா. இது எல்லாம் ரொம்ப புதுசு நர்த்தனாவுக்கு.

ஒரு பக்கம் கிணறு.. ,பக்கத்தில் பழுத்து தொங்கும். பலாமரம், வேம்பு, செம்பருத்தி, செவ்வந்தி, சந்திரகாந்தா, இருவாட்சி கொடி, துளசி.,டிசம்பர் பூ என பல வண்ண பூக்கள் ..!

பாட்டி பண்ணை வீட்டில் மாடிப்பகுதியை ஒதுக்கி இருந்தாள். நர்த்தனாவுக்கு.,

மாடியில் வந்து சன்னல் வழியாக, வெளியே பார்த்தாள். பலாப்பழம் பழுத்து அணில்கள் சூழ்ந்து கொள்ள.., சிட்டுக் குருவிகளும், மற்ற பறவைகளும் கூடவே சேர்ந்து கொத்தி கொண்டிருந்தன. மணம் நாசியில் ஊடுறுவியது.

புது அனுபவமாக இருந்தது. அவளுக்கு. பாட்டி அழைத்தாள் நர்த்தனாவை.

“என்னப்பா குளிச்சிட்டியா..,? முகுந்தை சாப்பிட அழைச்சிட்டு வா என்றாள்.டைனிங் டேபிளில் புட்டும், கூடவே பாசிப்பயறும் அப்பளமும்.., முகுந்து “வாவ் பாட்டி.., சூப்பர்”” என்றபடி சர்க்கரையை தூவி. “பிரமாதம் பாட்டி.., ” எக்ஸலன்ட் ‘ என சாப்பிட ஆரம்பித்தான்.

நர்த்தனா எப்படி சாப்பிட..,? குழம்பினாள்..
“பாட்டி.., நாளையிலேருந்து நர்த்தனாவுக்கு பிடித்த டிபன் பண்ணு பாட்டி..,” முகுந்த் சொன்னான். இவள் மாம்பழங்களையும், பலாவையும் ருசி பார்த்தாள்.

இவள் மேலே வந்தபோது முகுந்த் தூங்கியும் விட்டான். நர்த்தனாவும் பயணக் களைப்பில் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள்.

நர்த்தனா விழித்தபோது.., படபடக்கும் இறக்கை சப்தங்கள்,சின்ன, சின்ன கொஞ்சல்கள். மெதுவே எழுந்து..,மாடியின் சன்னல் வழியாக வெளியே பார்வையை..,திருப்பினாள்.

சன்னல் பக்கமாக..,பலா மரத்துக்கிளை ஒன்று சாய்வாக படர்ந்திருக்க., அதில் பஞ்சுபொதி போல் ஒரு கூடு. உள்ளே வருவதும் போவதுமாக இரண்டு சிட்டில்கள்.

மஞ்சள் கலந்த சாம்பல் கலரும் கலந்த கலவையில்.., இரண்டும் கிளைகளில் உட்காருவதும் பறப்பதுமாக இருந்தது. எங்கேயோ சேகரித்த பஞ்சுகளும், நார்களும் ,தேங்காய் சவுரிகளும் இடத்தை அடைத்திருக்க..,மூன்று முட்டைகள் உள்ளே.., குருவிகள் எந்நேரமும் வரலாம்.!!
மெல்ல விலகி கொண்டே கவனித்தாள் நர்த்தனா.

முகுந்தை மணமுடித்தப் பிறகு, ஆபீஸ் போவதும் வருவதுமே, சரியாக இருந்தது. முகுந்த் இவளிடம் நெருங்கி வரும் போதெல்லாம் வெறுப்பை காட்டினாள் நர்த்தனா. இயந்திர வாழ்க்கையாகி போனது இருவருக்கும்.., ”திருமணம் என்ற பந்தமே.., தேவையில்லாத ஒரு நரகம்”” தங்கையிடம் கோபமாய் பேசியிருக்கிறாள்.

இதில் குழந்தை பற்றி யோசிப்பதே பெரிய விஷயமாக இருந்தது “ச்சே கல்யாணமானா.., குழந்தைங்க மட்டும் தானா.., வாழ்க்கை..,?? அம்மாவிடம், பல முறை.., எரிந்து விழுந்தது ஞாபகம் வந்தது.!!

நான்கு நாட்கள் கடந்து போனது தினமும் சிட்டுக்குருவிகளின் கூட்டை பார்ப்பதே வேலையாகி போனது நர்த்தனாவுக்கு… அன்று வித்தியாசமான சில சப்தங்கள், விடிகாலையே விழித்து,விட்டாள் நர்த்தனா. சன்னல் வழியே பார்வையை விட்டாள்.

சின்ன செப்பு உதடுகள். குருவியின் முகத்தில் ஒரு சின்ன பிளவு போல அவ்வப்போது திறந்து, திறந்து மூட அற்புதமாக இருந்தது. ”என்ன ஒரு உலகம். ஒன்று தாயைப்போல.., ஒன்று தந்தைப்போல.., இன்னொன்று வால் குட்டியோ..,? வித்தியாசமாய் கண்சிமிட்டியது.!

கொள்ளை பிரியத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் நர்த்தனா. அன்று இரு குருவிகளுமே ரொம்ப உற்சாகமாய்.., இங்கே ஒரு உலகம் இயங்கி கொண்டிருக்க..,அந்த ஐந்து பேர் மட்டுமே புது உலகம் போல..,குஞ்சுகளோடு அளவளாவி கொண்டிருந்தது. ஆச்சரியத்தின் நுனியில் இருந்தாள் நர்த்தனா.!

நர்த்தனா கீழே இறங்காமலே காத்திருந்தாள். பாட்டியும் இரண்டு முறை அழைத்துப் பார்த்து விட்டாள். மேலே வந்து வெண்பஞ்சு இட்லியும், சாம்பாரையும்,சட்னியையும் வைத்து விட்டு போனாள்.

ஒன்றோடொன்று முகம் உரசி.., ஏதேதோ கதைகள் பேசி.., அங்கே ஒரு தாயின் அரவணைப்பையும்.., தந்தையின் போற்றுதலையும் நேரிலே கண்டாள். அவள். கண்கள் குளமானது. அம்மாவின் ஞாபகம் வந்தது.

“ஐந்தறிவு ஜீவனுக்கே தெரியும் பாசம் கூட, பல்கலையில் பயின்ற எனக்கு கூட தெரியாமல் போச்சே.., ச்சே..,

மாலை.., முகுந்த் வீட்டிற்குள் நுழைந்த போதே ”நர்த்தனா, நாளைக்கே டிக்கெட் போடலான்னு இருக்கேன். நீயும் இரண்டு நாளா..,மாடியிலே இருக்கே.., கிராமத்துக்கு வந்ததே உனக்கு பிடிக்கல.., சோ..,”” என்றவனின் முன்னே வந்து நின்றாள்.

”என்னங்க பாட்டி வீடு.., எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..இன்னும் ஒரு வாரம் கூட இருந்திட்டு போலாமே..,?
“என்ன நா்த்தனா சொல்றே..,?” ‘ முகுந்த் கண்கள் சுருக்கி.., பாட்டியை பார்த்தான்.
பாட்டி நான் இல்லை.., என தலையாட்டினாள் – maatha ithazh february 2023.

அந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து எனக்கு ஒரு மாறுதல் கிடைச்சிருக்கு.., முகுந்த். பிளீஸ், ஒரு வாரம் எனக்காக…,கண்கள் கெஞ்ச சொன்னாள்.

“சரி உன்னிஷ்டம் நர்த்தனா.” இப்பவே ஆபீஸ்க்கு, கால் பண்ணி ஓன் வீக் லீவு சொல்லிடுறேன்.”” அத்தையிடமும் பேசிடுறேன்.”” அவன் கைகளை பிடித்து சந்தோசமாய் குதித்தாள். மெல்ல அவனிடம் காதலாய் சரண்டைந்தவளை…,அணைத்துக் கொண்டான் முகுந்த்.

பாட்டி.., சிரித்தபடி மாடியை விட்டு கீழிறங்கி மல்லிகைப் பந்தலை நோக்கி நடந்தாள்.!!

– குமரி உத்ரா


செப்டம்பர் மாத ராசி பலன்கள்

மேசம்
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். உங்கள் மனதில் சிறு குழப்பங்கள் வரலாம். பணவரவு நன்றாகவே இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக அமையும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் நன்மை பயக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தி அடையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்து வரவும்

ரிசபம்
இந்த மாதம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். உங்கள் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும். பணவரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி இடையே உறவுகள் பலப்படும். விருந்து விழா செல்ல வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் பணியில் அதிக கவனம் காட்டவும். வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். கலைஞர்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் அதிகபட்ச லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்

மிதுனம்
இந்த மாதம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார். சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதம் வாகன யோகம் உண்டாகும். வராக்கடன் வந்து சேர வாய்ப்புகள் உள்ளன. நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் அதிக வருவாய் ஈட்டுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் வருவாய் இழப்பு ஏற்படும் – maatha ithazh february 2023.
பரிகாரம்: தினம் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

கடகம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையை செய்வார். எதையும் திறமையாக பேசி முடிப்பீர்கள். புதிய செய்தி ஒன்று வந்து சேரும். உங்கள் பூர்வீக நிலப் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான வருவாய் கிடைக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் விரிவாக்கம் செய்யப்படும். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் கவனமாக வேண்டும். விவசாயம் அதிக லாபம் அடையும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்

சிம்மம்
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையை செய்வார். உங்கள் வீட்டில் பல நன்மைகள் அடைவீர்கள். செலவுகள் சற்று அதிகரிக்கும். புனித யாத்திரை ஒன்று செல்ல வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். புதிய பொறுப்புக்கள் எதையும் ஏற்க வேண்டாம். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. பணியாளர்கள் பணியில் அதிக கவனம் காட்டவும். வியாபாரம் போட்டியில் செயல்படும். கலைஞர்கள் நல்ல வருவாய் ஈட்டுவார்கள். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவும். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்லா வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்

கன்னி
இந்த மாதம் புதன் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் நினைப்பதே நடக்கும். பண வரவு சற்று அதிகரிக்கும். புதிய தகவல் ஒன்று வந்து சேரும். திடீர் செலவுகள் வரலாம். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். பணியாளர்கள் கடுமையாக உழைக்க நேரிடும். வியாபாரம் லாப நஷ்டம் இன்றி அமையும். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டவும். விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டுவார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்

துலாம்
இந்த மாதம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். இந்த மாதம் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். முக்கியமான செயல்கள் தாமதப்பட்டு இறுதியில் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பணியில் அதிக அக்கறை காட்டவும். வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் குடும்பத்தில் அதிக காட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயம் நல்லா வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்

விருச்சிகம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். உங்கள் புத்திக் கூர்மையால் எதையும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. பணவரவுகள் தாமதமாகலாம். வெளிவட்டாரத்தில் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன.பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். விவசாயத்தில் அரசாங்க ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் பெருமை அடைவார்கள். மாணவர்களுக்கு அரசாங்க ஆதரவு கிடைக்கும். விவசாயத்தில் குடும்ப தேவைகள் நிறைவேறும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்

தனுசு
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பணவரவு தாமதம் ஆக வாய்ப்புகள் உள்ளன. வீண் பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் நிறைவேற சற்று தாமதம் ஆகலாம். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடல் நலத்தில் கவனம் காட்டவும். பிரயாணத்தை சற்று குறைக்கவும். பணியாளர்கள் பிரகாசம் அடைவார்கள். வியாபாரம் நவீனமயமாக்கப்படும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும்.

மகரம்
இந்த மாதம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். தேவையான பண வரவு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. இந்த மாதம் வாகன யோகம் அமையும். பணியாளர்கள் சங்கடங்களை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் பல நன்மை அடைவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் நன்கு முன்னேற்றம் அடையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்

கும்பம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையை செய்வார். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. பணவரவு சுமாராக அமையும். உங்கள் முன் கோபத்தை சற்று குறைக்கவும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். விவசாயம் சுமாராகவே இருக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமான் வழிபாடு செய்து வரவும்

மீனம்
இந்த மாதம் குரு பகவான் நன்மையை செய்வார். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரவும். எதிலும் வெற்றி காண்பீர்கள். பணியாளர்கள் பல பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரம் நன்கு சிறப்படையும். கலைஞர்கள் அதிக வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்

– முத்துசாமி அஞ்சல் துறை ஓய்வு

You may also like...