கவிதை தொகுப்பு 69

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக முதுகலைத் தமிழாசிரியர் மற்றும் கவிஞர் சே.சண்முகவேல் அவர்களை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம்.

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் பாலகிருத்திகா அவர்களை அறிமுகம் செய்கிறோம்.

மன்றல் வேண்டிய தூது..!

ஈ லோகமும் பிரகாசமாய் அருளும் ஆறுமுகனே..

இந்த இளசுகளையும் கொஞ்சம் கவனிப்பாயா..!

இளசுகள் என்று சொல்லக் கூட மெல்ல தயக்கம் தான்..!

ஏனெனில் வல்லு வளசல்கள் என்பதை தாண்டிய வயசாச்சே..!

உறவு முறைகளில் புதிய பொறுப்பு ஆவதற்கு இனி ஒன்றுமில்லை அத்தனையும் ஆயிற்று..!

மலை மலையாய் ஏறியுமாச்சு..
கடல்நீரினில் மூழ்கியும் பார்த்தாச்சு..

ஜாதகம் எல்லாம் சாதகம் ஆகும் என்ற சமாதானம் மட்டும் வேண்டாமே..!

வலைதளமோ நேர் வரனோ..
வாழ்க்கையை தேடி தருவதாய் தெரியவில்லை..!

சிவனின் சிலுவையோ புத்தரின் குல்லாவோ போட்டுக் கொள்ள தயார் தான்..

ஆனாலும் சில சமயம் போதி மரம் அழைப்பதாய் ஓர் உணர்வு இந்த பாதி மரத்தை..!

மாமன் பொண்ணோ மத்த பொண்ணோ..
எங்கே போனார்கள் என்று தேடிய வேலையில்,
தேடியே வந்தார்கள் பத்திரிகையோடு..!

வாய்ப்புகளை தவறவிட்டதில் பெரும் பங்கு உண்டு தான்..

அந்த பெரும் பங்கின் விலை அறியாத வயதினிலே..!

உனக்கு ஆனால் தெரியும் என்பார்கள்,
புலிக்கு புல் ஆகாதென்று யாரய்யா சொன்னார்கள்..!?

பாவம் பார்த்து பதில் தூது அனுப்பு காத்திருக்கிறோம் வழக்கம் போல்..!

 – மணிகண்டன் கோபி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *