வலையோடை பதிவு 7

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 7

valaiyodai part 1

வாழ்வை வெறுத்தவன்…வலிகளை கூறுவான்…வாழ்வை உணர்ந்தவன்…வழிகளை கூறுவான்..!
@AnjaliTwitz


ரத்து ஆகி போன ரயிலுக்கு யார் காத்து இருப்பார்கள்.? தண்டவாளங்களை தவிர – மனோகுட்டி
@TRAMESH21548526


விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் சலித்துப்போற அளவுக்கு அன்பை நிரூபிக்காதீர்கள்.
@THARZIKA


உதிர்காலம் என்பது…
சருகுகளின் குவியல் அல்ல..
அஃது உயிர்த்தலுக்கான
அடிப்படைகளை
சரிபார்த்தல்..
@Rahmath_Krish


அன்பின் அழகியல்
உயரங்களில் இல்லை
உளங்களில்தான் இருக்கிறது
@weknowth827


நீ “முடியாது^ என்று உதறித் தள்ளிய செயல் இன்னொருவருக்கு  “முடியும்” என்ற நம்பிக்கையை வளர்க்கிறது…!!!!
@sankariofficial


மரணம் என்பது
பறவைகளுக்கு தான்
இறகுகளுக்கு அல்ல..!
@Aakashkannan96
– valaiyodai part 7


முகவரி தெரிந்தும் தாண்டிப் போகிறவர்களுக்கு
தெருவின் அடையாளம் மட்டுமே போதுமாயிருக்கிறது
@Lakshmivva1


நீண்ட நாள் தனிமையை விரும்பினால் பக்குவப்பட்டு விட்டோம் என்று
இந்த உலகம் நம்புகிறது.
@THARZIKA

You may also like...

3 Responses

  1. வீ.ராஜ்குமார் says:

    நீ “முடியாது^ என்று உதறித் தள்ளிய செயல் இன்னொருவருக்கு “முடியும்” என்ற நம்பிக்கையை வளர்க்கிறது…!!!!
    @sankariofficial

    சிறப்பு! 👏
    ஒருவரின் அவநம்பிக்கை அடுத்தவரின் முதலீடாவதை அழகாகக் குறிக்கிறது! இதையே,
    ‘எவராலும் முடியாது என்பது
    எனக்குத் தெரியாது
    எனவே
    என்னால் முடிந்தது!’ என்று நயம்பட உரைப்பர்.

  2. தி.வள்ளி says:

    ரத்தாகிப் போன ரயிலுக்கு யார் காத்திருப்பார் தண்டவாளங்களை தவிர…அருமையான வரிகள் ..அனைத்தும் அருமை

  3. படிக்கும் போது யாவரின் பட்டறிவோ’? என்று எண்ணத்தோன்றுகிறது