Daily Archive: June 28, 2010

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்

un peyarin arthangal

உன் பெயரின் அர்த்தங்கள்

தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போதுஅதில் தேவதை என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு உன் பெயர் அதை அலங்கரித்து இருந்தது , ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள் அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!!  – நீரோடைமகேஸ்