மௌனக் கீதம்

வழியெல்லாம் ரோஜாப்பூ சிதறிய மௌனக் கீதம் mounageetham bathilgal death message
அலங்கரிப்பில் கிடப்பதைக் கண்டேன்.

சற்று தொலைவில் சிலருடன்
ஒரு அமரர் ஊர்தி நகர்ந்து கொண்டிருந்தது.

mounageetham bathilgal death message

உயிருக்கு விடை கொடுத்து விட்டேன்,

உலகிற்கு விடை கொடுக்க போகிறேன் என்ற
நிலையில் அந்த மலர்களும், அமரரும்
மௌனக் கீதம் இசைக்க.

அவருக்காக பிரம்மன் செய்த நாட்காட்டி
எமனால் செயலிழக்கப்பட்டது . நம் நாட்காட்டிக்கும்
இதே நிலை என்ற எண்ணம் கொண்ட உள்ளம்
தவறு செய்யாது…

 – நீரோடைமகேஷ்

mounageetham bathilgal death message

You may also like...

11 Responses

  1. நிலையாமைத் தத்துவத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

  2. நிலையாமைத் தத்துவத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

  3. இன்று தான் தங்கள் பக்கம் வருகிறேன் வலையமைப்பும் ஆக்கங்களும் பாராட்டத்தக்கன.

    வாழ்த்துக்கள்.

  4. sasi says:

    macchi kalakkita da

  5. sasi says:

    machi kalakkita da

  6. M.R says:

    அவருக்காக பிரம்மன் செய்த நாட்காட்டி
    எமனால் செயலிழக்கப்பட்டது . நம் நாட்காட்டிக்கும்
    இதே நிலை என்ற எண்ணம் கொண்ட உள்ளம்
    தவறு செய்யாது… அருமையான வரிகள், வரிகள் என்பதை விட அருமையான தத்துவம் .இதை உணர்ந்தால் ஏது சண்டை,போட்டி,பொறாமை.பகிற்வுக்கு நன்றி நண்பரே

  7. M.R says:

    இன்று முதல் தங்களை தொடர்கிறேன்

  8. Chitra says:

    உயிருக்கு விடை கொடுத்து விட்டேன்,
    உலகிற்கு விடை கொடுக்க போகிறேன் என்ற
    நிலையில் அந்த மலர்களும், அமரரும்
    மௌனக் கீதம் இசைக்க.

    …. இன்று – நான்….. நாளை – நீ
    ……. மௌனத்திலும் சொல்லும் செய்தி. நல்லா எழுதி இருக்கீங்க.

  9. Maheswaran.M says:

    கருத்துரைக்கு மிக்க நன்றி தோழர்களே. இன்று தான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்

  10. Chitra says:

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  11. மோகன் says:

    அருமை