பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 2

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பாரதியாரின் புதிய ஆத்திசூடி பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 2

bharathiyar puthiya aathichudi

ஓய்தல் ஒழி

ஓய்தல் ஒழித்தல் என்பதே
உயர்வடையவே ஒருவன்
தேர்த்தெடுக்க வேண்டிய
வழியில் உயர்வழியேயாம்
ஓய்வறியா சூரியனை
உணர்ந்தே நீயும் அதன்
செயல் போல் நின்றிடு

ஔடதம் குறை

ஔடதம் குறை என்பதுவே
மருந்தில்லா பெருவாழ்வே
நற்சிந்தனை நல்லுணவு
நடைபயிற்சி இவற்றை
நாளும் மேற்கொள்வாயின்
நலமே நீ உள்ளத்தாலும் உடலாலுமேயாம்

கற்றது ஒழுகு

கல்வியென கற்பதுவே
கௌரவத்திற்கு அன்று
என்றேதான் நீ உணர்ந்து
கற்ற நற்செயல்களையே
நாள்தோறும் கடைபிடித்தல்
உயிரென உயர்த்தியே நீ
சிக்கெனப்பிடி

காலம் அழியேல்

சென்ற ஒருநொடி பொழுது
மீண்டு வராதென தெரிந்து
செப்பியதோர் வார்த்தை
பொருளுணர்ந்து சோம்பித்
திரியாது சுறுசுறுப்பு கற்க
எறும்பை உற்று நோக்கு
தேனீயை துணைகொள்

கிளைபல தாங்கேல்

உன்னால் ஒரு நேரத்தில்
ஒருசெயல் மட்டுமே செய்ய
முடியுமென தெள்ளெனவே
தெரிந்தால் ஓன்றே செய்
ஒன்றும் நன்றே செய்
நன்றும் இன்றே செய்
இன்றும் இன்னே செய்

கீழோர்க்கு அஞ்சேல்

கீழோர் செயலதன் இறுதி
தீமையே விளைவெனவும்
நல்லன ஏதுமில்லை என
உணர்தல் எளிதேயாம்
என்பதால் கீழோர் செயல்
கண்டு அச்சப்படுதல்
அவசியமில்லையன்றோ

குன்றென நிமிர்ந்து நில்

குன்றென நிமிர்ந்திருக்க
குறைவரா நற்செயல்கள்
வேண்டும் என்பதனையும்
அன்றி குன்றுதல் என்பதே
யாவருக்கும் எளிதெனவும்
கண்டு கொள்ளவதூஉம்
அரிதென்பேன்

கூடித் தொழில் செய்

செய்யும் தொழிலதனால் நான்கு
பேருக்கு மட்டும்
நன்மை என்பதுவாயின்
அதனையே கூட்டுறவாய்
செய்வதானால் பல்கியே
பலனடைவோர் பெருகுதல்
கண்கூடனென தெரியுமே

கெடுப்பது சோர்வு

சோர்வு என்பதுயாதெனில்
சோம்பலெனும் கீழ் குணம்
என்பதன்றி அதன் இறுதி
அத்தனையும் நட்டமென
சொல்லவும் வேண்டுமோ
என்பதானல் சோம்பலை
அழிக்க பயிற்சி கொள் – bharathiyar puthiya aathichudi 2

கேட்டிலும் துணிந்து நில்

கேடு என்பதன் விளைவே
கெட்டதென பார்க்காமல் வறுமை
என மற்றோர் அர்த்தமுள்ளதென
அறிந்து வறுமையிலும்
துணிந்து
நற்செயலாற்றலே நன்றாம்
மானுடர் அழகிற்கழகென

– மா கோமகன்

You may also like...