வான்மீகர் சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகர் சித்தர் வரலாறு, ராமாயணம் இயற்றிய பின்னணியும் பற்றி வாசிக்க – vanmeegar siddhar

vanmeegar siddhar

வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள். ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர். தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான் புற்று மூடி மறைக்கும் வரை உறுதியுடன் ஜெபித்தார். அதனாலேயே அவரை வான்மீகி என்றழைத்தனர். வான்மீகி முனிவர் ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார்.
அக்காரணங்களால் தாமும் அமரத்துவம் பெற்றதை எண்ணி வான்மீகர் சற்றே கர்வம் கொண்டார். அச்சமயத்தில் அவரைக்காண அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் வந்தார்.

சிவதரிசனம்

சிவபக்தரான மார்க்கண்டேயர் வான்மீகியிடம், “வான்மீகரே, அமர்த்துவம் எய்த ஆயிரம் ஆண்டுகள் தவம் எதற்குப ஒருநாள் ஒரு பொழுது சிவபூஜை செய்தால் போதுமே! என்றார்.

ராம பக்தரான வான்மீகர் அதனை கேட்டு சினம் கொள்ளவில்லை. தாமும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார். அதற்கான வழியை மார்க்கண்டேயரும் அவரிடத்தில் “தாங்கள் தென்னகத்து செல்லும் பொழுது ஓரிடத்தில் நான் இங்கு இருக்கிறேன் என்று அசிரீரி கேட்கும். அந்த இடத்தில் தவமியற்றினால் விரைவில் சிவதரிசனம் கிடைக்கும் என்றார்.

அதன்படியே தென்னகம் வந்த வான்மீகிக்கு நான் இங்கு இருக்கிறேன் என உணர்த்தி இறைவன் அருள்பாலித்த திருத்தலம் தான் திருவான்மியூர். இத்தலத்தில் இறை தரிசனம் பெற்ற வான்மீகி தான் தரிசனம் பெற்ற கடற்கரை தலம் எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும். சிவபெருமானின் சடையில் உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தீர்த்தமாக தங்க வேண்டும்.

இராமாயணத்தை தந்தவர்

ஈசன் தன் தாண்டவக் கோலங்களை தான் (வான்மீகர்) காணும்படி ஆடியருள வேண்டும் என சிவபெருமானிடம் மூன்று வரங்கள் கேட்டார். உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார் – vanmeegar siddhar

வான்மீகர் ஆதிகாவியமாகிய ராமாயணத்தை இயற்றினார்.
யோகவாசிஷ்டம்,
வால்மீகன் பதினாறு’
அத்புத ராமாயணம்,
கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் …

போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் .. உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் .. – vanmeegar siddhar

வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார் (நன்றி – Google Group).

You may also like...

1 Response

  1. Jothi bai says:

    தகவல்களுக்கு நன்றி.