தீபாவளி சிறப்பு கவிதைகள்

காத்திருந்து வந்தவிழா
காரிருளை போக்கிடுமே
புத்தாடை பளபளக்க
புதுவெடியும் படபடக்க
தீயவை ஓடி
தித்திப்பை தேடி
நல்லவர்கள் கூடி
நல்லதை பாடி
உள்ளங்கள் கூடி
உவகையில் ஆடி
சொந்தங்கள் கூடி
சொர்க்கத்தை நாடி
திசையெங்கும் திருநாளாய்
தீப ஒளி பெருநாளாய்
மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி
மத்தாப்பாய் சிரிக்கட்டும்

அந்தியூரான்
(ஸ்ரீராம் பழனிசாமி)


dheepavali kondaduvathan nokkam

தீபஒளி நாள்

மழையோடு பனியும்
இதமாகப் பொழிய
அழையாத மேகமும்
கருணையது காட்ட
உழைக்கும் ஏழையின்
உளமது களிக்க
தழைக்கவே பசுமை  நிலைக்கவே இயற்கை

பொன்னான நன்னாளை
பொலிவோடு வரவேற்று
அன்போடு பெரியோரை
வணங்கி மகிழ்ந்திட

தீப ஒளி திருநாள்
திகட்டாது வந்ததுவே
இருளது அகற்றி
பயம்தனை போக்கி
மகிழ்ச்சியை நிரந்தர
குடியமர்த்த வந்ததுவே

கவிஞர் பாலாஜி
சுந்தரம் புத்தகக்கடை, போளூர்


தீப ஒளி

தீப ஒளி தீபாவளி
திருநாளாம்
தித்தித்த நாளாம்
திகைக்கவைத்த திருநாளாம்

உறவுகளோடு உறவாடி
உல்லாசம் பொங்கும் தீபாவளி
பேரின்பம் கண்டதுவே
பெருமிதம் தந்ததுவே

புதுவித ஆடைகளை உடுத்தி
பூரிக்கவைக்கும் தீபாவளி
வெடிகள் வெடித்து
வெற்றிக்களிப்பில்
கொண்டாடும் தீபாவளி

தீப ஒளி
தீபாவளி
இருளை அகற்றி
இன்பத்தை அள்ளித் தந்திடும்

மதிப்புறு முனைவர்
இரா. இரமணி ஆசிரியை, சேலம்.

You may also like...