கவிதை போட்டி 2022_01 | மற்றும் போட்டி 2021_12 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-01

kavithai potti

கவிதை போட்டி 2021-12 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
கவிஞர் சோமு சாவித்ரி
நெருப்புவிழிகள் சக்திவேலாயுதம்
கவிஞர் நித்யானரேஷ்

அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.


கவிதை போட்டி 12 அறிவிப்பு

  • மார்கழிக்கு விடை கொடுப்போம்
  • குயடியரசு இந்தியா
  • உழவர் திருநாள்
  • ஜல்லிக்கட்டு
  • திருவள்ளுவர் ஒரு பொக்கிஷம்
  • தைப்பூசம்
  • தை மகளை வரவேற்போம்
  • விரும்பிய தலைப்பு

தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-01. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

23 Responses

  1. Dr Jannathulla R says:

    #முதுமை

    அத்திமர தூணப்போல
    அத்தனையும் தாங்கி நிண்டேன்
    பொத்திவச்ச வாழ்க்கை என்ன
    போத்திக்கொள்ள வச்சுருச்சு

    தாய்மடியில் தவழ்ந்ததெல்லாம்
    தரை அடியா மாறிப்போச்சு
    தவமிருந்த வாழ்க்கை இப்போ
    தரிசு நெலமாயிருச்சு

    உண்ட சோறு செரிக்கலயே
    உறக்கம் வந்து சேரலயே
    உள்ளம் ஒன்ன தேடுனாலும் – அத
    உரக்க சொல்ல தோணலயே

    மூத்திரமும் போயிருது
    முழுச்சு நானும் இருக்கயில
    முடுஞ்சவர எழநெனச்சேன்
    முடியலயே முடியலயே

    திண்ட திட திரவம் எல்லாம்
    திடகழிவா வந்துசேர – அத
    திரும்ப திரும்ப சொல்லும் போது
    திசையறியா பறவையானேன்

    காலு கையி இழுத்துகிட்டு
    கட்டிலுல கெடக்கும் நேரம் – எங்
    கண்ணக்குழி தொட்டுபேசும்
    கண்ணீரின் கதையுமானேன்

    ஆசைப்பட்டு நானும் கேக்க – ஆயுள.,
    ஆண்டவனும் ஆக்கி வச்சான் – அது
    அவ்வளவு அவஸ்தையினு
    அப்ப எனக்கு புரியலயே

    என்னோட கஷ்டமெல்லாம் – நான்
    மண்ணோடு போகும்போது
    தன்னாலே மாறும்முன்னு
    என்ன தேத்த முடியலயே……….

  2. பழ வள்ளியப்பன் says:

    தை மகளை வரவேற்போம்

    மார்கழிக்கு விடை கொடுத்து
    இனிமையுடன் தையவளை வரவேற்போம்
    தைபிறக்கின்ற வேளையிலே
    குலவையிட்டு பொங்கல் வைப்போம்

    வந்தாரை கரம் கொடுத்து
    வாழ வைத்த பூமி இது
    தைபிறந்தால் மாற்றம் வரும்
    நன்மை செய்யும் சாமி இது

    பொங்கலுடன் தொடங்குதிந்த மாதம்
    இனியனைத்தும் பால் போல பொங்கி வரும் காலம்
    வேதனைகள் மறையும் இந்த நேரம்
    கவலையது சென்று விடும் தூரம்

    செங்கரும்பு சுவையுடனே ஆரம்பம்
    பச்சரிசி பொங்கலென்றால் தேனூறும்
    விதவிதமாய் காய்கறிகள் வரிசையில்
    உண்ண வேண்டாம் என்றுமதை தனிமையில்

    வாசலிலே கோலமிட்டு காத்திருந்தோம்
    தையவளை எதிர்பார்த்து மனதெல்லாம் பூத்திருந்தோம்
    இல்லம் நோக்கி வந்துவிடு திருமகளே
    இன்பம் அள்ளிஅள்ளித் தந்துவிடு பொன்மகளே

  3. S. V. Rangarajan says:

    தை மகளை வரவேற்போம்.
    பனிக்காலம் முடிந்து தமிழன் திருநாளாம்
    பொங்கல் ஆரம்பம் அதற்கு முன்
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    போகிப் பண்டிகை முடிந்ததும்
    சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
    பொங்கல் கொரானா காணாமல் போகவும்
    ஒமக்ரான் வரும் முன்னரே
    தலை தெறிக்க அனுப்பி விடுவோம்.
    வரும் தமிழ் புத்தாண்டு சுபகிருதை வரவேற்க தயாராவோம்

  4. *உழவர் திருநாள்*
    உலகின் உயிர்நாடி உழவன்
    அவனே தொழில்கள் முதல்வன்
    ஏர் பின்னால் ஓடும் உலகம்
    உணவின்றி போனால் மடியும்
    உயிர்களை காக்கும் கடவுள்

    குழந்தைகள் போல கவனித்து
    பயிர்கள் சாகுபடி செய்வான்
    தேவையற்ற களைகள் எடுத்து
    குடிநீர் ஊற்றி தாகம் தீர்த்து
    உரங்கள் போட்டு வளர்த்து

    கண்போல் பாதுகாத்து
    விளைச்சல் ஆனதும் மகிழ்ந்து
    தானியங்கள் பிரித்து
    அழகாய் மூட்டைக்கட்டி
    விற்பனைக்கு அனுப்பும் தாய்

    தானியங்கள் பஞ்சு
    காய்கறி கனிகள் பூக்கள்
    விதவிதமாக விளைவித்து
    பசுமை புரட்சி
    உழவர்க்கு
    பொங்கல் நாளில் வாழ்த்துக்கள்

    எஸ் வீ ராகவன் சென்னை

  5. *தை மகளே வருக*

    பழையன கழிதல் போகி பண்டிகை/
    புதியன புகுதல் பொங்கல் பண்டிகை/
    மாடுகள் வாழ்ந்தும் மாட்டுப் பொங்கல்/
    உறவுகள் போற்றும் காணும் பொங்கல்/

    பச்சரிசி பால் களைந்து வைத்து/
    வேற்றுமை நீக்கி ஒற்றுமை சேர/

    பொங்கும் மங்கல பொங்கல் வரவேற்பு/
    வளமும் நலமும் மகிழ்ச்சி தரட்டும்/
    வயல்வெளிகளில் பயிர் வளர்ச்சி நிறையட்டும்/
    *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/*

    எஸ் வீ ராகவன் சென்னை

  6. நித்யாநரேஷ் says:

    ‌தலைப்பு:தமிழும் நானும்

    ‌மடியில் ஆயிரம் பிள்ளைகள்
    ‌எனினும் ஏக்கம் கொண்ட
    ‌என்னிடம் பாசம் காட்டும்
    ‌விந்தை என்னவோ?
    ‌விட்டு விலகினால் உணர்கிறேன் உள்ளத்தில் ஏதோ நெருடல்….
    ‌உயிருள்ளவரை அவளே என் தேடல்….
    ‌நான் விழும்போதெல்லாம்
    ‌தன்னம்பிக்கை தந்தவள்….
    ‌முடக்க நினைப்பவர் முன்
    ‌முளைக்க செய்தவள்….
    ‌நித்தமும் அற்புதங்களை அள்ளித்தருபவள்…..
    ‌அவளை நீங்கிட என்
    ‌மனம் ஒப்புமோ!
    ‌அவளில்லாத இடத்தில் எனது
    ‌விழிகள் விடியலைக் காணுமோ!
    ‌முப்பிரிவிழும் தேர்ந்தவள்….
    ‌இம்மண்ணின் மூத்த மகள்….
    ‌வாடாத வண்ணமலர் அவள்…
    ‌இத்துனை எழில் கொண்டவள்
    ‌என் தமிழன்னையின்றி வேறு யாரோ?
    ‌அவள் வாழும் இடமெல்லாம்
    ‌என் பாதம் பதிப்பேன்….
    ‌மாண்டாலும் அவளது பெயர்
    ‌சொல்லிடவே மீண்டும்
    ‌தமிழ் மகளாய் பிறப்பேன்….

  7. பகீரதன் தனுசியா says:

    பத்து நிமிடம் குழந்தையைப் பார்ப்பதென்றால்-பித்து பிடித்து விடும் அனைவருக்கும்
    பத்து மாதம் வயிற்றில் சுமந்திட்டாள்
    முத்துப் போன்ற குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு அன்னை

    உயிரை அழிக்கும் இவ் உலகிலே
    உயிரை வழங்கும் உன்னதம்
    உனக்கு இன்றி வேறுண்டோ? அன்னையே

    கண்ணால் ஒரு போதும் காணாத் தெய்வத்தை கண்டம் விட்டு கண்டம் தாண்டி வணங்குகின்றனர்

    கண்முன்னே உள்ள கருணைத் தெய்வத்தை காலில் வீழ்த்தி ஏறி மிதித்து செல்கின்றனர்

    வலி என்றால் உயிர் போகிறது என்பார்கள்
    ஆனால் பிரசவ வலியில் மட்டுமே உயிர் வருகிறது
    ஆணிற்கு கிடைக்காத பாக்கியமாக
    பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு
    தாய்மை

    ஓர் துளி இரத்தம் சிந்தி விட்டால் உடனே அழுவார்
    ஆனால் உடம்பில் உள்ள உதிரத்தை பாலாக்கி பாலூட்டி வளர்த்திடுவாள்

    நாம் எத்தனை கோயில் சென்று மனக்கவலை தீர்த்தாலும்
    மனக்கவலையைத் தராத இடம்
    தாயின் கருவறையே

    தாய் வாழும் இடம் கோயில்
    தாயே தெய்வம்
    தாயின் வார்த்தைகள் மந்திரம்
    தாயின் செயல் இறைவன் செயல்

    தன் தூக்கத்தை தொலைத்து
    நம் தூக்கத்திற்காக
    தாலாட்டு பாடிடும்
    அன்னையே

    இரத்தத்தில் தீர்த்தால் என்ன
    தியாகத்தில் ஈடாகுமா
    பெற்ற கடன் தீர்ப்பேன் என்றால்
    ஓர் ஜென்மம் போதாதம்மா

  8. S Sriram says:

    வாழ்விலே சிரித்து மகிழ்ந்த நிமிடங்களை விட சிதைவு தந்த நிமிடங்களே நினைவில் அதிகம் வாழும்… வாழ்வில் நினைத்தவாறு நிமிடங்களில் எல்லாம் சிரிப்பு வாழ வேண்டும் தொடர்ந்து நகரும் நிமிடங்களில் நாம் உன் முகத்தில் சிரிப்பு வாழ வேண்டும்…

  9. நித்யாநரேஷ் says:

    தலைப்பு: உழவர் திருநாள்
    ஆடிப்பட்டத்தில் மாரி மழை பொழிந்ததடி!
    ஏரிகளும் குளங்களும் நிறைந்ததடி!
    வயல் வெளிகளின் பசுமையில்
    உழவன் உள்ளமும் நெகிழ்ததடி!
    துளிர் விடும் பயிர்கள் இவனுக்கு கனவடி!
    களத்தில் குவிந்த நெல்மணிகள் இவனுக்கு பரிசடி!
    மாடுகள் இவன் சுமையை தோல்கொடுத்தும் பால் கொடுத்தும் பகிர்ந்ததடி…
    இயற்கைக்கு நன்றி சொல்லவே காணும் பொங்கலடி…
    மாடுகளுக்கு நன்றி சொல்லவே பட்டிப்பொங்கலடி….
    உறவுகள் கூடிப் பொங்கலிட்டு
    குலவைப்பாடி கொண்டாடும் நாளடி!
    அழுக்கு துணிக்கும் அயராத உழைப்புக்கும் விடுமுறை தந்த நாளடி!
    அதுவே தமிழர் திருநாளாய் உழவர் திருநாளாய் தைமுதல் நாளாய் வந்ததடி!
    பொங்கலைப் போல் இனிமை பொங்கட்டும் !
    கருப்பைப் போல் தித்திக்கட்டும்!
    மஞ்சளைப் போல் மங்களம் உண்டாகட்டும்!
    கோலத்தைப் போல் வண்ணமயமாகட்டும்!
    உழவன் வாழ்வு!

  10. S.Sowdeeswari says:

    கருவிழி அரசி ♥️..

    காலை நான்கு மணியில் இருந்தே தொடங்கி விடுகிறாள் அவள் புலப்பை ..
    உணவை விரையமாக்கி இரண்டு வாயோடு முடித்து விட்டு..
    குளிக்காமல் ..
    கலைந்த சீலையோடு..
    பயணத்தைத் தொடங்குகிறாள் இரண்டு மாடுகளோடு…
    பயணம் அந்தி மாலை வாயில்லா பிராணி களோடே ..
    முடிந்து விடுகிறது ..
    நாளெல்லாம் ..
    இருந்தாலும் கூட ..
    ஆசையாய் ..
    அவ்வளவாய் ருசி இல்லாத சாதத்தை உலகம் வெல்லும் அளவு ரிசியோடு பரிமாறி விட்டு ..
    பழைய. சாதத்தை இரண்டு வெங்காயத்தோடு ருசித்து விட்டு .
    அடுத்த நாளுக்கு ஆயத்தம் ஆகிறாள் ..என்னவள்💋♥️

  11. நித்யாநரேஷ் says:

    தலைப்பு: குடியரசு இந்தியா

    இந்தியன் ஒவ்வொருவருக்கும்
    இந்நாளே பொன்னாள்!
    இந்நாளின் பின்னால் பல
    தியாக கதைகள் வீர செயல்கள்!
    இந்நாளின் முன்னால் சுதந்திரம்
    இந்தியாவின் கனவு!
    எந்நாளும் மனதில் வேண்டும்
    அடிமைக்காலத்தின் நினைவு!
    பூரண சுதந்திரம் காணவே
    புத்திமான்களின் தேர்வாய் மக்களாட்சி!
    இன்றோ பேராசையும் சுயநலமும்
    தலைவிரித்தாட!
    வேடிக்கை பார்க்கிறது மனசாட்சி!
    முற்போக்கு சிந்தனையும் செயலும்
    நல்ல குடிமகனுக்கு அழகு!
    சட்டவிரோத செயல்களில் இருந்து
    எப்போதும் விலகு!
    நல்லரசும் வல்லரசும் இந்தியனின் கனவாகட்டும்!
    நல்ல உழைப்பாளிகளாக நல்ல தலைவர்களாக நாமே உருவெடுப்போம்!
    முன்னோர்களின் தியாகத்திற்கு மதிப்பளிப்போம்!
    அன்னாள் போல் இந்நாளிலும்
    வளமை காத்திட வளர்ச்சி கண்டிட
    சமத்துவம் பெற்றிட சகோதரத்துவம் போற்றிட
    இறையாண்மை காத்திட கலைகள் வளர்த்திட
    உறுதி கொள்வோம்! நாட்டின் வளர்ச்சியில் நம் வளர்ச்சி காண்போம்!
    சுயநலம் களைந்து பொதுநலம்பேண இந்தியக்குடிமகனாய் இன்றே
    அடித்தளம் அமைப்போம்!

  12. நித்யாநரேஷ் says:

    தலைப்பு: குடியரசு இந்தியா

    இந்தியன் ஒவ்வொருவருக்கும்
    இந்நாளே பொன்னாள்!
    இந்நாளின் பின்னால் பல
    தியாக கதைகள் வீர செயல்கள்!
    இந்நாளின் முன்னால் சுதந்திரம்
    இந்தியாவின் கனவு!
    எந்நாளும் மனதில் வேண்டும்
    அடிமைக்காலத்தின் நினைவு!
    பூரண சுதந்திரம் காணவே
    புத்திமான்களின் தேர்வாய் மக்களாட்சி!
    இன்றோ பேராசையும் சுயநலமும்
    தலைவிரித்தாட!
    வேடிக்கை பார்க்கிறது மனசாட்சி!
    முற்போக்கு சிந்தனையும் செயலும்
    நல்ல குடிமகனுக்கு அழகு!
    சட்டவிரோத செயல்களில் இருந்து
    எப்போதும் விலகு!
    நல்லரசும் வல்லரசும் இந்தியனின் கனவாகட்டும்!
    நல்ல உழைப்பாளிகளாக நல்ல தலைவர்களாக நாமே உருவெடுப்போம்!
    முன்னோர்களின் தியாகத்திற்கு மதிப்பளிப்போம்!
    அன்னாள் போல் இந்நாளிலும்
    வளமை காத்திட வளர்ச்சி கண்டிட
    சமத்துவம் பெற்றிட சகோதரத்துவம் போற்றிட
    கலாச்சாரம் காத்திட கலைகள் வளர்த்திட
    உறுதி கொள்வோம்! நாட்டின் வளர்ச்சியில் நம் வளர்ச்சி காண்போம்!
    சுயநலம் களைந்து பொதுநலம்பேண இந்தியக்குடிமகனாய் இன்றே
    அடித்தளம் அமைப்போம்!

  13. ரம்யா தங்கதுரை says:

    தலைப்பு: மார்கழிக்கு விடை கொடுப்போம்

    பனிவிழும் அதிகாலை
    இனித்திடும் குயிலோசை
    மலர்ந்திடும் வண்ணப்பூக்கள்
    மார்கழியின் மாயமென்ன

    இளம் மங்கையரின் கைவண்ணம்
    வீதியெங்கும் வண்ணகோலம்
    கோவிலெங்கும் இசைநாதம்
    மார்கழியின் மாயமென்ன

    மண்ணும் குளிர
    மரமும் குளிர
    மௌனமாய் மயக்கிடும்
    மார்கழியின் மாயமென்ன

    பனிவிழும் இரவும்
    குளிர்ந்திடும் நிலவும்
    இதமாய் வருடும்
    மார்கழியின் மாயமென்ன

    வெண்பனியும் விலகியதே
    விடைபெற்று நகர்கிறதே
    மார்கழியின் மாயமென்ன!

    ரம்யா தங்கதுரை

  14. லோகநாயகி.சு says:

    தைப்பூசம்…..

    தந்தையின் குருவாய் நின்றான்
    தாரக சூரனை வென்றான்,
    கந்தனாம் நாமம் கொண்டான்
    கையினில் வேலைக் கொண்டான்,
    செந்திலில் அருளைத் தருவான்
    சேந்தனாய் அழைத்தால் வருவான்,
    தந்தையாய் அருள்வான் தன்னை
    துதித்திடு பூசம் தன்னில்…!

    LoganayakiSuresh

  15. ரம்யா தங்கதுரை says:

    தலைப்பு: தாயின் மொழி

    என் உயிர் வரையும் ஓவியமே
    உருவமில்லா காவியமே!

    மலடி என்ற பட்டத்தையும்
    வாங்க மனம் மறுக்குதடா!

    ஊர் உலகம் பழிக்குதடா
    வயிற்றில் புழுபூச்சி இல்லையென!

    விழி நீரும் பெருகுதடா
    உயிர்க்கரைந்ததே உருகுதடா!

    என் மௌனம் என்னும் மொழியாலே
    நித்தம் உன்னை அழைக்கின்றேன்!

    பிள்ளைமொழி நான் கேட்க
    பிறவி பலன் அடைவேனே!

    மழலை மொழியில் சொல்வாயா
    “அம்மா” என்று அழைப்பாயா!

    பிறக்காத தங்க பெட்டகமே
    புணரும் கடிதம் உனக்காக!

    மொழி அறியா முத்தமிழே
    உன் தாயின் மொழி அறிவாயா!

    ரம்யா தங்கதுரை

  16. ச. சௌடீஸ்வரி says:

    தலைப்பு: எதிர்பார்ப்பு

    எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தும் ..
    இல்லமும்..
    வாயிலும் ..
    கண்ணுக்குக் காணாம போனாலும்..
    நாடு நாடாக சுற்றியும்..
    ஆசை குறையவில்லை ..
    சோர்வும் பயந்து ஓடின ..
    என்னைப் பார்த்து ..
    புது முகவரிக்காக
    தேடல் தொடர்கிறது ..
    இருந்தும் புது பாதை கூட உருவானது ..
    நான் சென்ற வழியெல்லாம் களைப்பானது…
    முதிர்ச்சியிலும் தொடரும் என் அகதிப் பயணம்…😔

  17. தாரா says:

    குடியரசு தினம்

    ஓற்றுமையாய் வாழ்ந்திடு

    சாதி மதங்களை மறந்திடு

    மக்கள் ஆட்சி மலர்ந்திடு

    மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு

    சட்ட திட்டங்களை மதித்திடு

    வரும் சத்தியா சோதனைகளை

    கடந்திடு

    நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை

    நினைத்திடு

    கொடிகாத்த குமரனை போற்றிடு

    கடமை,கண்ணியம், கட்டுபாடு என

    வாழ்ந்திடு

    நாட்டுக்காக உழைக்கும்

    இராணுவத்தில் நீ சேர்ந்திடு

    தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்

    தியாகத்திற்கு தலைவணக்கு

    நாம் தேசிய கொடியை வானில்

    உயர பறக்கவிடு

    நாம் இந்தியா நாட்டை உயரத்தில்

    வைத்துவிடு

    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

    ஜெய்ஹிந்த்

  18. தாரா says:

    தலைப்பு: குடியரசு தினம்

    ஓற்றுமையாய் வாழ்ந்திடு

    சாதி மதங்களை மறந்திடு

    மக்கள் ஆட்சி மலர்ந்திடு

    மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு

    சட்ட திட்டங்களை மதித்திடு

    வரும் சத்தியா சோதனைகளை

    கடந்திடு

    நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை

    நினைத்திடு

    கொடிகாத்த குமரனை போற்றிடு

    கடமை,கண்ணியம், கட்டுபாடு என

    வாழ்ந்திடு

    நாட்டுக்காக உழைக்கும்

    இராணுவத்தில் நீ சேர்ந்திடு

    தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்

    தியாகத்திற்கு தலைவணக்கு

    நாம் தேசிய கொடியை வானில்

    உயர பறக்கவிடு

    நாம் இந்தியா நாட்டை உயரத்தில்

    வைத்துவிடு

    ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

    ஜெய்ஹிந்த்

  19. ச. சௌடீஸ்வரி says:

    கருகிய வானில்…
    கழித்தெடுத்த வெண்ணிற முத்துக்கள்..
    மோகன மங்கையின் உடல் தழுவி
    தித்திப்பாய் தவழ்கிறது அவள் இதழோரம்..
    செந்தாமரை இதழில் நழுவிய நீரெல்லாம் கொட்டுகிறது ..
    அர்ஜுனனின் குதிரை வீச்சைத் தாண்டி…
    குளித்த மேக மங்கைகள் எல்லாம் ஒளிந்து கொண்டு ஓடுகிறார்கள் ..
    கூந்தல் நனைந்து விடும் என்று…
    ஒருவள் மட்டும் தன் உடலோடு இருக்க அணைத்துக் கொள்கிறாள் ..
    தன் மன்னவன் வந்ததும்..
    காதலால் நிரம்பி வழிகிறாள்..
    அள்ளித் தெளிக்கிறாள் ஊரெங்கும்..அமுதமாய்💦

  20. தாரா says:

    தலைப்பு : நீர்

    மலையில் தோன்றுகிறாய் பாய்ந்து

    ஒடுகிறாய் கல்,மண் என கடந்து

    வருகிறாய் காடு,மேடு என சுற்றி

    திரிகிறாய்

    குளம், குட்டையில் வந்து தாங்கி

    விடுகிறாய்

    ஆறு,கடல் என நாடு விட்டு நாடு

    செல்கிறாய்

    பல உயிர்களை வாழ வைக்கிறாய்

    சுனாமியாய் சில சமயம் மாறி

    விடுகிறாய்

    பயிர்களை செழித்து வளர

    செய்கிறாய்

    கங்கை,காவிரி, வைகை என

    புண்ணிய நதியாகிறாய்

    மீனவர்களின் அன்னையாகிறாய்

    முத்து,சிப்பி, பவளம் என விலை

    உயர்ந்த பொருள்களின் பிறப்பிடம்

    ஆகிறாய்

    உன் வடிவத்தை நீ இருக்கும்

    இடத்திற்கு ஏற்றபடி காட்டுகிறாய்

    உன் கருணையால் உன்னையே

    தருகிறாய்

    உலகிற்கு அமிர்தமாய் நீ

    இருக்கிறாய்

    உன் அருமை எங்களுக்கு

    புரியவைக்கிறாய்

    நீர் இன்றி இந்த உலகம் அமையாது

    என தெரியவைகிறாய்

  21. பூ.தனுஷ்மதி says:

    தலைப்பு: ஓவியம்

    அறியாத வயதில் ஆர்வத்தோடு
    கிறுக்கத் தொடங்கிய
    அந்நாளிலிருந்தே
    காதலில் விழுந்தேன்!!

    அர்த்தம் புரியாமல்
    தொடங்கிய இக்காதல் இன்று
    அகிலம் தொடத் தூண்டுவதேன்…

    விரல் இடுக்குகளில்
    சிக்கிக்கொண்டு
    விந்தைகள் பல செய்து
    என் மனதை கவர்ந்ததேன்…

    கனாக்களோடு கழிந்த
    என் இரவை
    காகிதத்தோடு கழிய வைத்ததேன்…

    காதலின் சுவையை அறிந்தேன்
    முடித்த ஓவியத்தை முத்தமிட்டு ரசிக்கையில்!!!

    இப்பேதையின் முட்டாள் தனமான
    இக்காதல் முடிவில் சிறந்த ஓவியன் என்ற
    மகுடம் சூட்டாவிட்டாலும்
    காதல் செய்வது மட்டும்
    முடிவிலி எண்ணிக்கையில் தொடரும்!!!!!

  22. தாரா says:

    தலைப்பு: காதல்

    புதிதாக வந்த மாற்றம் என்னது

    தென்றல் வந்து என் காதில் காதல்

    சொன்னது

    காதல் வந்து விட்டாது பருவம் மாறி

    விட்டது இதயம் உன்னை

    நினைத்தாது சொல் காதலே

    காதல் இல்லை என்றேன் அவளை

    காணும் வரை

    வாழ்க்கை இல்லை என்றேன்

    ஆசை தோன்றும் வரை

    கனவு பொய் என்று சொன்னேன்

    அவள் இதயத்தில் நுழையும் வரை

    கவிதையின் அர்த்தம் புரியும் வரை

    கடலின் ஆழம் தெரியும் வரை

    காதல் ஒன்று தான் இந்த உலகம்

    அழியும் வரை

    றெக்கை இல்லாமலே வானில்

    பறக்கலாம்

    மொழி இல்லாமலே கண்கள்

    பேசலாம்

    நீ இல்லை என்றால் என் காதல்

    கை சேருமா

    நீர் இல்லாமல் பூக்கள் பூக்கலாம்

    வாசல் இல்லாமல் காற்று

    வந்து விடலாம்

    அன்பு இல்லாத வாழ்விலும் காதல்

    உண்டகலாம்

    இதுதான் காதல்

  23. Shivani Priyanga says:

    தலைப்பு: காணா ஒரு காதல் காவியம்!

    எந்த சிந்தையில் உன்னை கண்டறிந்தேன் என்று தெரியவில்லை?
    என் கனவுகளில் உன்னை சித்தரித்து , காவியமாக்குகிறேன் எனினும் ஏன் என்று புரியவில்லை!
    உனக்கே தெரியாத பலகோடி உரையாடல்கள் உன்னுடன் கடந்துவிட்டேன்!
    உன் விருப்பங்கள் எல்லாம் கோர்க்க கோர்க்க
    என் விருப்பமின்றியும் அதை நிறைவேற்றுகிறேன் என் கனவுலகில்!
    நித்திரை முழுதும் உன் ஓவியமே என் உலகமாகிறது!
    புவியின் ஓரம் நின்று உன் கரங்கள் கோர்த்து,
    அந்த நீண்ட வானின் நிலவை நீ ரசிக்க,
    உன் விழிகளின் ஓரம் நான் வேண்டும் என்ற எண்ணங்கள்
    கரை ததும்ப காதல் என்று வரைந்தேன்…
    ஒவ்வொரு நிமிடமும் புதிதுபுதிதாய் புரியாத புன்னகை தருகிறேன்,
    பின்னணியில் உன் பார்வை படர்ந்ததால்….
    கூட்டமான பேருந்தில் மௌனமாக ,
    நம் இமைகள் கதைக்க காத்திருக்கின்றேன்!
    உன் ஒவ்வொரு சத்தமும் கொண்டு என் வரிகளுக்கு வாழ்க்கை தருகிறேன்!
    நான் எழுதும் கவிதை நீ படிக்க கேட்டு,
    கன்னம் சிவக்க ஏங்குகிறேன்!
    காணா காதலுக்கே இத்தனை கோடி கனாக்கள் கோர்த்திருப்பின்,
    கண்டபின் கணக்கும் கடன் வாங்க கூடினால்,
    கண்அவனின் கண்களில் கைதாகும் கைதி என்னமோ
    காதல் வயப்பட்ட இந்த கிழத்தி தானோ!