பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai

kavi devika kavithai

அகிலத்தின் அதிபதியவள்!!
அசாதாரண ஆகரியவள்!!
ஆக்கலின் இலங்கிழையவள்!!
இசைத்தமிழின் ஈறிலியவள்!!
ஈடில்லா உசாத்துணையவள்!!
உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!
ஊகையின் எல்லவள்!!
எழுச்சியின் ஏகலைவியவள்!!
ஏம்பலின் ஐம்பொறியவள்!!
ஐயமகற்றும் ஒட்பமவள்!!
ஒப்புமையில்லா ஓவியமவள்!!
ஓம்கார ஔவையவள்!!

ஆகரி, இலங்கை – பெண்
அறிவி – கடவுள்
உசாத்துணை- தோழி
ஊகை – கல்வி
எல் – பகலவன்
ஏம்பல் – ஆரவாரம்,இன்பம்
ஒட்பம் – அறிவு.
ஓம் – ப்ரணவம்
ஔவை – தவப்பெண்.
ஊராண்மை – ஊராளும் தன்மை.

– கவி தேவிகா, தென்காசி.

You may also like...

2 Responses

  1. கவிதை அருமை..புதிய சொற் பிரயோகம் ..பொருளுடன்..அருமை

  2. Pavithra says:

    Super kavi, nalla irukku