Category: நீரோடை ஆசிரியர்கள்
நீ நதி ஓடும் பாதையா நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து உன் காதலை வாங்கினேன். கவிஞனாக ஓராயிரம் கவிதைகள் படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பிரம்மனின் கனவுகளும் தொடாத கற்பனை நீ, ஆனால் என் நிஜத்தில் என் வாழ்க்கையில். – நீரோடைமகேஸ்
தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...
ஜென்மங்களை வென்ற காதல் என்று kaathal kolai kaari pirivu thuyar நினைத்தாலும், தன் தாயின் ஒரு துளி கண்ணீர் அதை விலை பேசிவிடும். தன்னை சுமந்த கருவறையை குளிர்விக்க, தன் காதலையும் கல்லறைக்கு அனுப்பும் உலகமடா இது! உறவுகளை மட்டுமல்ல ! காதலையும் காலமெல்லாம் சுமப்பது...
குருதி மட்டுமே துளைத்து செல்லும் என் நரம்புகளில் வெற்றிடம், இரத்த நாளங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.என் அன்பே நீ எங்கே ? என் இதயத்தின் சுவர்களை உடைத்தும் காணவில்லை ! கனவுகள் தொடாத கரையை கற்பனையில் வற்ற வைத்து தேடிப் பார்க்கிறேன் காணவில்லை.உயிரில் நூலெடுத்து காதல் வலை...
ஆயிரம் தான் உணர்வுகளை அனுபவித்து கற்பனையில் கோட்டை கட்டி வாழத் துடித்தாலும், உன் நினைவுகளில் மிஞ்சும் ரணத்திற்கு பதில் சொல்வது என்னவோ பிரிவு தான். காலக் கணிதமே நீ என்று இருந்தேன் கணக்கு போட்டு காலத்தை கழித்தாய் என்னோடு. கை பிடித்து நீ நடந்து, கனவோடு நான்...
உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க ! உன் மடியில் என் முகம் தொலைக்க ! உன் இதயத்தில் என் மூச்சை தொலைக்க ! உன்னில் என்னை தொலைக்க ! உன் கூந்தலில் என் சுவாசம் தொலைக்க ! உன் கண்களில் என் காட்சிகளை தொலைக்க !நினைத்து...
நான் சோகத்தில் இருக்கையில்….. தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு கொன்று விடுகிறேன், அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும் மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில் வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான். சிகரங்கள் தொடும் துன்பங்கள், துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த...
தன்னை மறந்து ( தோல்வி பயத்தில் ) தனிமையில் நின்று உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து சிலையாய்ப் போன நாட்களில் நானிருப்பேன் என்று உன்னிடம் ஊமையாய் இருக்கும் நம்பிக்கை என்ற வார்த்தையின் புலம்பல்களை கைவிடாதே ! உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில் இலக்கு மட்டுமே கேள்வியாய் !...
மொழிகள் சுவைக்க தோன்றும் உன் பெயரை உச்சரிக்கும் என் உதடுகளைச் சுற்றி வட்டமிடும் தேனீக்கள் கூட்டம். theneekkal kavithai பயண நேரத்தில் பேனா (எழுதுகோல்) இல்லாமல் தவித்த போது, என் கைபேசியில் சேமித்து வைத்த வரிகளை உனக்கு அனுப்பிய கணம், உடனே ஒரு அழைப்பில் என் கவிதைக்கு...
தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன். நீ போகும் இடமெல்லாம் நிழலாக நான் வர வேண்டும். இல்லையென்றால் நிழல்...