Author: Neerodai Mahes

kaathal maayai

மாயை

என் காதல் என்னும் மாயையினால் உடைந்தது என் இதயக்கண்ணாடி என்று இருந்தேன் , ஆனால் உடைந்தது அதன் பிம்பம் மட்டுமே?? காதல் மாயை தெரிந்து விட்டதால்!!!!!!!!!!!! – நீரோடைமகேஷ்

paniperathesamaaga kathal kavithai

பனிப்பிரதேசமாக

Pani Perathesam Kathan Kavithai நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை உருக்கி அந்த சமுத்திரத்தில் கலந்தாலும் கூட , அது பனிப்பிரதேசமாக மாறி விடும், ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால்.  – நீரோடைமகேஸ் Pani Perathesam Kathan Kavithai

kathalikkiren kavithai

காதலிக்கிறேன்

என்னை இழக்காமல், என் இதயம் காயப்படாமல், எனக்குள் சிரிக்காமல், தனிமையில் கரையாமல், காதலிக்கிறேன், அந்த….. “காதல்” என்ற வார்த்தையை மட்டும் !!! – நீரோடைமகேஷ்

uyirai adagu vaithu

உயிரை அடகு

எனக்காக நீ சிந்திய கண்ணீர் துளிகளை விலை பேசினேன். என் உயிரை அடகு வைத்தாவது வாங்கலாமென்று…. ஜென்மங்கள் பல சேர்த்து உயிரை அடகு வைத்தாலும் ஈடாகாது அன்பே.  – நீரோடைமகேஷ்

gnayabagangal kathal kavithai

ஞாபகங்கள்

வெறுத்த என்னையே உன்னால் மறக்க முடியாத போது???????? gnayabagangal kathal kavithai விரும்பிய உன்னை மட்டும் என்னால் எப்படி மறக்க முடியும்… ……………………  ஞாபகங்கள்  ……………………  – நீரோடைமகேஷ்

un punnagai kaatchi thiraiyil

காட்சித்திரையில்

தலை சாய்த்து மழலை போல் அன்று நீ மலர்ந்த புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத பூந்தோட்டமாய் . எத்தனையோ முகங்கள் கடந்தாலும் உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின் காட்சித்திரையில் ……… – நீரோடைமகேஷ்

thavippugalil punnagaiyin arthangal

தவிப்புகளில்

நம் முதல் சந்திப்பின்கடைசி நேரப்  பிரிவின் போது , thavippugalil punnagaiyin arthangal உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!!   – நீரோடைமகேஸ் thavippugalil punnagaiyin arthangal

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்